search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Introduction Meeting"

    • கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. இளைஞர் அணி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார்.
    • பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ராஜபாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. இளைஞர் அணிக்கு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகேஷ், துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ராஜராஜன், கார்த்தி, மணிகண்டன், அன்சாரி, ராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும். தி.மு.க. அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, பொன் முத்தையா பாண்டி யன், பூசைபாண்டியன், மதிமாரிமுத்து, சேர்மதுரை, ராமச்சந்திரன், கிறிஸ்டோபர் வெற்றிவிஜயன், நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் தேவா என்ற தேவதாஸ், மகேஸ்வரி, பொறியாளர் அணி பசுபதிபாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×