search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hansika"

    • இயக்குனர் ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்'.
    • இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

    இயக்குனர் ராஜு துசா எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்'. இப்படத்தை ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் சார்பில் பொம்மக் சிவா தயாரித்துள்ளார். ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கால அளவு ஒரு மணி நேரம் மற்றும் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். இந்த நேரத்தை ஒரே ஷாட்டில் சுவாரசியமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.


    ஒன்றல்ல ஐந்தே நிமிடம்

    சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கிஷோர் பாய்தாபு ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்' படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களது திருமணத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


    ஹன்சிகா -சோகைல் கதுரியா

    இந்நிலையில், நடிகை ஹன்சிகாவின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை ஹன்சிகா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
    • ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார்.

    தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார். ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், ''பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனது அம்மா சிறுவயதிலேயே எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார். நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்றும் அவர் கூறுவார். அதனால்தான் நான் கதாநாயகி ஆன பிறகு குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டேன்.




     இப்போது 31 குழந்தைகள் என்னிடம் இருக்கிறார்கள். அவர்களை தத்தெடுத்து வளர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.




    கடவுளின் ஆசி இருப்பதால்தான் என் வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. திருமணமான பிறகு சினிமாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தேன். சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்றேன். 20-ந் தேதி முதல் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட போகிறேன். கிட்டத்தட்ட ஏழு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இரண்டு வெப் தொடர்கள் உள்ளன. எனவே நான் மிகவும் பிசி'' என்றார்.

    • நடிகை ஹன்சிகா - சோகைல் கதுரியா திருமணம் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது.
    • இவர்களது திருமணத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    ஹன்சிகா - சோகைல் கதுரியா

    இந்நிலையில், நடிகை ஹன்சிகா திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




    • நடிகை ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை காதலித்து வந்தார்.
    • இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது.

    தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


    இதையடுத்து புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதன் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. மருதாணி வைக்கப்பட்ட சிவந்த கைகளுடன் ஹன்சிகா போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது.


    அதன்பின் திருமண சடங்குகள் தொடங்கியது. இதில் இசை கச்சேரி கொண்டாட்டம் நடந்தது. மணக்கோலத்தில் நடிகை ஹன்சிகா-சோகைல் கதுரியா நடந்து வரும் வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது.


    இதையடுத்து ஹன்சிகா-சோகைல் கதுரியா திருமணம் நேற்று மாலை ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகை ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
    • இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் களைகட்டி வருகின்றன.

    தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதன் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. மருதாணி வைக்கப்பட்ட சிவந்த கைகளுடன் ஹன்சிகா போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது.

     

    அதன்பின் திருமண சடங்குகள் தொடங்கியது. இதில் இசை கச்சேரி கொண்டாட்டம் நடந்தது. மணக்கோலத்தில் நடிகை ஹன்சிகா-சோகைல் கதுரியா நடந்து வரும் வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது. மணமகள் உடையில் உள்ள ஹன்சிகா, சோகைல் கதுரியாவுடன் நடந்து வந்தார். பின்னர் இசைக்கு ஏற்ப உற்சாகத்துடன் ஹன்சிகா நடனமாடினார்.

    நேற்று மாலை போலோ போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை காண ஹன்சிகா, சோகைல் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் சென்றனர். இருவரும் வெள்ளை நிற உடையில் பழமையான காரில் போலோ மைதா னத்துக்கு சென்றனர். பின்னர் இரவில் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

     

    ஹன்சிகா-சோகைல் கதுரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடக்கிறது. முன்னதாக இன்று காலை ஹல்தி விழா தொடங்கியது. இதில் மணமக்கள் குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    • நடிகை ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
    • இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் களைகட்டி வருகின்றன.

    தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பிரான்சில் ஈபிள் டவர் முன்னால் நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்து இருந்தார். இவர்கள் திருமணம், 450 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நாளை (டிசம்பர்) 4-ந் தேதி நடக்க உள்ளது.

     

    ஹன்சிகா - சோகைல் கதுரியா

    ஹன்சிகா - சோகைல் கதுரியா

    இதனையொட்டி 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன. வியாழனன்று நடைபெற்ற மெஹந்தி ஃபங்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தின. மருதாணி சிவந்த கையுடன் ஹன்சிகா அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

     

    ஹன்சிகா - சோகைல் கதுரியா

    ஹன்சிகா - சோகைல் கதுரியா

    இதைத்தொடர்ந்து இவருடைய திருமண சடங்குகள் தற்போது துவங்கி உள்ள நிலையில், இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சுபி இசை கச்சேரியுடன் தொடங்கியுள்ளது. ஹன்சிகா மணமகள் கோலத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது. இதில் ஹன்சிகா மணமகள் உடையில் சோஹைல் கதுரியாவுடன் நடந்து வருகிறார்.

    • நடிகை ஹன்சிகா சமீபத்தில் தொழிலதிபரும் நெருங்கிய நண்பருமான சோகேலை திருமணம் செய்யவுள்ளதை அறிவித்திருந்தார்.
    • இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.

    தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.


    ஹன்சிகா - சோகேல்

    இவர் சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான சோகேலை திருமணம் செய்யவுள்ளதை சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார். மேலும், இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 04-ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.


    சோகேல் திருமணத்தில் ஹன்சிகா

    இந்நிலையில், சோகேலுக்கும் ஹன்சிகாவின் தோழிக்கும் ஏற்கனவே திருமணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தொழிலதிபர் சோகேல் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹன்சிகாவின் தோழி ரிங்கு என்பவரை திருமணம் செய்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றதாகவும் செய்தி பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர்களின் திருமண நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா பங்கேற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் சபரி - குரு சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.


    ஹன்சிகா

    சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இயக்குனர் சபரி - குரு சரவணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். ஃபிலிம் வொர்க்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.


    கார்டியன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு 'கார்டியன்' என தலைப்பு வைத்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • ஹன்சிகா இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
    • இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.


    ஹன்சிகா பட பூஜை

    சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.


    படக்குழு

    இப்படத்தில்  மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றதையடுத்து இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

    • சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் மஹா.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மஹா. இதில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூன் 10- ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை.


    மஹா திரைப்படம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதன்படி, ஜூலை 22-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    'வாலு' திரைப்படத்திற்கு பிறகு சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மஹா'. இத்திரைப்படம் ஹன்சிகாவின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘மஹா’ படத்திற்காக நடிகர் சிம்பு இடைவிடாமல் நடித்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
    ஹன்சிகா நடிப்பில் தற்போது 'மஹா' திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, கோவாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு சிம்பு மற்றும் ஹன்சிகா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

    எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், சிம்புவுடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். 

    இது குறித்து அவர் கூறும்போது, "நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். இந்த கட்ட படப்பிடிப்பில் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. 



    சிம்பு உடனான தருணங்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன. அவரை பற்றி வெளியில் சொல்லப்பட்டதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. முதல் நாளில் இருந்தே, நான் அவரது ஒவ்வொரு விஷயங்களையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். எங்களால் ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, சிம்பு ஏதாவது பிரச்சினை செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ, "சார், இது ஒன்றும் திரையில் தெரிய போவதில்லை, படப்பிடிப்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார். 

    நாங்கள் மதியம் 12 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியாக படம் பிடித்தோம். ஆனாலும் அவர் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டு விட்டு தான் செல்வார். அத்தகைய ஒரு நடிகரை பெறுவது எங்களை போன்ற ஒரு வளரும் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய வரம். 

    ஹன்சிகா முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார். அவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கிறது. இயக்குனர் ஜமீல் மிகத் திறமையாக சிறப்பாக செயல்படுகிறார். எந்த ஒரு அழுத்தத்தையும் சவால்களையும் மிகவும் எளிதாக கையாள்கிறார், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணும் அவரை போலவே. இளைஞர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த குழுவும் எனர்ஜியை முழுமையாக பரப்பி வருகின்றது" என்றார்.
    ×