என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Grandfather arrested"
- 8 வயது சிறுமி தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை கைது செய்தனர்.
கோவை
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் சிறுமிக்கு தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வேலைக்கு செல்லும் அவரது பெற்றோரால் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமியை அவரது தாய் சோமனூரில் உள்ள பாட்டி வீட்டில் விட்டார். கடந்த 24-ந் தேதி முதல் சிறுமி அவரது பாட்டி வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று தனிமையில் இருந்த சிறுமியை, அவரது தாத்தா பேத்தி என்றும் பாராமல் கழிவறைக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாயாருக்கு தெரியவர அதிர்ச்சி அடைந்த அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்