search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை-தாத்தா கைது
    X

    கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை-தாத்தா கைது

    • 8 வயது சிறுமி தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை கைது செய்தனர்.

    கோவை

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் சிறுமிக்கு தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வேலைக்கு செல்லும் அவரது பெற்றோரால் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமியை அவரது தாய் சோமனூரில் உள்ள பாட்டி வீட்டில் விட்டார். கடந்த 24-ந் தேதி முதல் சிறுமி அவரது பாட்டி வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று தனிமையில் இருந்த சிறுமியை, அவரது தாத்தா பேத்தி என்றும் பாராமல் கழிவறைக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயாருக்கு தெரியவர அதிர்ச்சி அடைந்த அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை கைது செய்தனர்.

    Next Story
    ×