என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "government worker death"
புதுச்சேரி:
புதுவை சாரம் சின்னையன்பேட் அய்யனார் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண ராஜி. இவர் தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு அச்சகத்தில் மஸ்தூர் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி எழிலரசி இறந்து விட்ட நிலையில் இவர்களது மகன் பிரவீன்ராஜ் வெளியூரில் தங்கி சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு பிரவீன் ராஜ் தனது தந்தை கிருஷ்ணராஜிக்கு போன் செய்தார். ஆனால், கிருஷ்ணராஜ் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரவீன்ராஜ் அருகில் உள்ள தனது சித்தப்பா குப்புராஜிக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.
இதையடுத்து கிருஷ்ணராஜியின் வீட்டுக்கு குப்பு ராஜ் சென்று பார்த்தார். அப்போது சாப்பாட்டு அறையில் கிருஷ்ணராஜ் சாய்ந்த நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ணராஜை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது கிருஷ்ணராஜ் இறந்து விட்டது தெரிய வந்தது.
கிருஷ்ணராஜ் சாப்பிட்டு கொண்டிருந்த போது, தொண்டையில் உணவு சிக்கி மூச்சு திணறி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்