search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government worker death"

    புதுவை அருகே சாப்பிட்ட போது தொண்டையில் உணவு சிக்கி அரசு ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் சின்னையன்பேட் அய்யனார் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண ராஜி. இவர் தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு அச்சகத்தில் மஸ்தூர் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி எழிலரசி இறந்து விட்ட நிலையில் இவர்களது மகன் பிரவீன்ராஜ் வெளியூரில் தங்கி சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு பிரவீன் ராஜ் தனது தந்தை கிருஷ்ணராஜிக்கு போன் செய்தார். ஆனால், கிருஷ்ணராஜ் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரவீன்ராஜ் அருகில் உள்ள தனது சித்தப்பா குப்புராஜிக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

    இதையடுத்து கிருஷ்ணராஜியின் வீட்டுக்கு குப்பு ராஜ் சென்று பார்த்தார். அப்போது சாப்பாட்டு அறையில் கிருஷ்ணராஜ் சாய்ந்த நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ணராஜை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது கிருஷ்ணராஜ் இறந்து விட்டது தெரிய வந்தது.

    கிருஷ்ணராஜ் சாப்பிட்டு கொண்டிருந்த போது, தொண்டையில் உணவு சிக்கி மூச்சு திணறி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×