search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "funding"

    மெக்சிகோ எல்லைப்பகுதியின் குறுக்கே 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு தடுப்புச்சுவர் கட்டும் அதிபர் டிரம்ப் திட்டத்துக்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. #USHouse #Trump #mexicoborderwall
    வாஷிங்டன்:

    மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இருநாட்டு எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவியை ஏற்றநிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் கடந்த ஆண்டு டிரம்ப் கையொப்பமிட்டார். 

    அதுமட்டுமின்றி, இந்த தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணத்தை மெக்சிகோ தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    ஆனால், அதை மெக்சிகோ நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கருத்து தெரிவிக்கையில், “சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது” என முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்த திட்டத்துக்காக தேவைப்படும் நிதியில் 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான விவாதத்தின்மீது பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 217 உறுப்பினர்களும் எதிராக ஜனநாயக கட்சியை சேர்ந்த 185 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    எனினும், டிரம்ப்பின் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பாராளுமன்ற மேல்சபையில் நாளை இதுதொடர்பாக நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அவருக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

    மதில் சுவர் கட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகையை முடக்கினால் அமெரிக்க அரசின் பிற முக்கிய துறைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற காரணத்தை முன்வைத்து மதில் சுவருக்கான நிதி ஒதுக்கீட்டை மேல்சபையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. #USHouse #Trump #mexicoborderwall
    இலங்கை பாராளுமன்றத்துக்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சீன நிறுவனத்திடம் நன்கொடை பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார். #Rajapaksa #ChinesefundinginSLpolls
    கொழும்பு:

    இலங்கை பாராளுமன்றத்துக்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது சீனாவில் உள்ள பிரபல நிறுவனத்திடம் இருந்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே 76 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக பெற்றதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

    இதுதொடர்பாக, பதில் அளிக்காமல் மவுனம் காத்துவந்த ராஜபக்சே, தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

    அந்த கட்டுரையில் காணப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சீனாவிடம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே காட்டிவந்த நெருக்கம் தொடர்பாக இந்தியா முன்னர் கவலை கொண்டிருந்ததாகவும், இலங்கையின் ஹம்பன்டோட்டா துறைமுகத்தை சீனா ராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ளக்கூடும் என அச்சம் தெரிவித்திருந்ததாகவும் அந்த கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளதையும் ராஜபக்சே மறுத்துள்ளார்.

    சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் தொடர்பாக இந்தியாவை ஆட்சி செய்த முன்னாள் காங்கிரஸ் அரசுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை நான் எப்போதுமே மீறியதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த பரபரப்பு குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விரைவில் விசாரணைக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. #Rajapaksa #ChinesefundinginSLpolls
    ×