search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire walk festival"

    கன்னியகோவிலில் நடந்த தீ மிதி திருவிழாவில் இரு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியகோவிலில் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.

    விழாவில் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இந்த நிலையில் தீமிதி விழா நடைபெற்று கொண்டிருந்த போது ஏற்கனவே முன் விரோதத்தை வைத்து கொண்டு வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த இளைஞர்களும், மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் மோதலில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் கையாலும், தடியாலும் தாக்கிக்கொண்டனர்.

    இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. விழாவை காண வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 2 கிராமத்தை சேர்ந்த வாலிபர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    மேலும் மோதலில் ஈடுபட்ட வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த வசந்தகுமார் (19), ராயப்பன் (24), கலைச்செல்வன் (27) மற்றும் மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜய மூர்த்தி (24), அருண்ராஜ் (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக 2 கிராமத்தை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×