search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finance owner suicide"

    பணம் வசூலாகாததால் மன உளைச்சல் அடைந்த நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாராபுரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் லக்கையன்பேட்டை அத்திக்கோம்பை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பிரவீன்குமார் (வயது 27). இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் தங்கி 3 நண்பர்களுடன் தினசரி வசூல் வட்டி, மாத வசூல் மற்றும் ஆட்டோ பைனான்ஸ் செய்து வந்தார்.

    பிரவீன்குமாருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.8 லட்சம் வசூலாகவில்லை. இதனால் நண்பர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் பிரவீன்குமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பிரவீன்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிரவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×