search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity connection"

    • மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தமிழகம் முழுவதும் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.
    • மின்பொறியாளர் குருசாமி உத்தரவின்படி பிரசார வாகனம் மூலம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி உபமின் நிலையத்தில் இன்று தொடங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை வட்டம், நெல்லை நகர்புற கோட்டத்தின் சார்பாக மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தமிழகம் முழுவதும் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணியை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி உத்தரவின்படி பிரசார வாகனம் மூலம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி உபமின் நிலையத்தில் இன்று தொடங்கப்பட்டது. அதனை நெல்லை நகர்புற கோட்டத்தின் செயற்பொறியாளர் முத்துக்குட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் எட்வர்ட்பொன்னுசாமி, உதவி செயற்பொறியாளர் சங்கர், பாளை உபகோட்ட உதவி மின்பொறியாளர்கள் வீரபுத்திரகுமார், செல்வம், சங்கரநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பிரசார வாகனம் சமாதானபுரம், சாந்திநகர், வண்ணார்பேட்டை, வி.எம்.சத்திரம் வழியாக சென்றது.

    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை புரிந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

    தற்பொழுது தச்சநல்லூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு நெல்லை நகர் புறக்கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி தலைமை தாங்கினார். பழைய பேட்டை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.

    மேலும் உதவி மின் பொறியாளர்கள் சரவணகுமார், சரவணன், அருணன், மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் 103 சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தியாகராஜநகரில் நெல்லை மத்திய அலுவலகத்திலும், தற்பொழுது தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை புரிந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் திருப்பணிபுரம் கிராமம் அமைந்துள்ளது.
    • கிராமத்துக்கு தேவையான மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் திருப்பணிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் மின்சாரம், குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் இருந்து வந்தது.

    மின்சாரம் வழங்க உத்தரவு

    இதுகுறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில், அக்கிராமத்துக்கு தேவையான மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மலை கிராமமான பாபநாசம் கீழ் முகாம் பிரிவிற்குட்பட்ட திருப்பணிபுரம் கிராமத்திற்கு புதிதாக மின் கம்பங்கள் நட்டு மின்சாரம் வழங்க மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது.

    அவ்விடங்களுக்கு மின் கம்பங்களும், மின்பாதைகளும் அமைக்கவேண்டிய இடம் வனத்துறையின் வசம் இருப்பதால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க தற்பொழுது மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமையில் நடந்து வருகிறது. மேலும் அங்குள்ள வீடுகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக வழங்கப்பட்ட பேட்டரிகளுடன் கூடிய சூரிய ஒளி மின்விளக்குகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    இங்கு தாமிரபரணி ஆறு 3 இடங்களில் கிளை ஆறுகளாக பிரிவதால் மொத்தம் 6 இரட்டை மின்கம்பங்களுடன் சுமார் 52 மின்கம்பங்கள் மூலம் உயர் அழுத்த மின் பாதைகள் கொண்டு சென்று 63 கிலோவாட் மின்மாற்றி அமைத்து அங்கு இருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மதிப்பீடு தயார்செய்ய கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தலைமையிலான குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் ராமகிளி, உதவி மின் பொறியாளர் விஜயராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி உள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதானால் பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய்த்துறை, பஞ்சாயத்துத்துறை, தமிழ்த்துறை, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன.

    இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள துறைகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் மின் இணைப்புக்கான கட்டணம் பல மாதங்களாக கட்டப்படாமல் இருந்தது. ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கு மின்வாரியம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை.

    மின்சார கட்டணம் கட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை மின்வாரிய ஊழியர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அந்த கட்டிடத்திற்கான மின் இணைப்பை துண்டித்தனர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் மின் ஊழியர்களிடம், மின் இணைப்பை ஏன் துண்டித்தீர்கள் என கேட்டனர்.

    அதற்கு அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பல மாதங்களாக மின் கட்டணம் கட்டப்படாமல் இருந்தது. அதனால் மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றனர்.

    மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கிய பல துறைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று 2-வது நாளாகவும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர்கள் அனைத்தும் செயலிழந்தன. ஊழியர்கள் பணியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகிறார்கள். #tamilnews
    ×