search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrical attack death"

    மதுரை அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    மதுரை சேடப்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் விஜயன் (வயது 37). கொத்தனார். சம்பவத்தன்று தனது வீட்டில் உள்ள மோட்டாரை இயக்க சென்றபோது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த விஜயனை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஜயன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27). இவர் திருக்கழுக்குன்றம் நகரில் மளிகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன் முருகன் தனது வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால் அதை சரி செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி முருகன் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு, திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வேப்பந்தட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 58). இவர் நேற்று தனது வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தை பார்ப்பதற்காக வயலுக்கு சென்றார். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வி.களத்தூர் போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் நாரணமங்கலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இங்கு சாத்திக்கோட்டையை சேர்ந்த வேம்பன் மகன் சேகர் (வயது 40) என்பவர் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று பணிகளை முடித்து விட்டு மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளார். இதில் எதிர்பாரத விதமாக மின்சாரம் சேகர் மீது பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சேகர் இறந்தார்.

    சேகரை காப்பாற்றுவதற்காக அவருடன் பணியாற்றும் சாமிகண்ணு முயற்சி செய்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×