என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27). இவர் திருக்கழுக்குன்றம் நகரில் மளிகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன் முருகன் தனது வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால் அதை சரி செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி முருகன் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு, திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






