என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Eeratukku bridge"
- நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
- எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பாலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனத்தில் இருந்து சாலையில் சிறிது தூரம் ஆயில் சிந்தியது.
நெல்லை:
நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பாலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனத்தில் இருந்து சாலையில் சிறிது தூரம் ஆயில் சிந்தியது.
இதனால் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையில் வழுக்கி விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக பெரிய வாகனங்கள் அந்நேரத்தில் வராததால் சாலையில் விழுந்தவர்கள் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பொதுமக்கள் தகவலின்பேரில் நெல்லை சந்திப்பு போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி தலைமையில் காவலர்கள் ராஜதுரை மற்றும் கோபால் ஆகியோர் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு விரைந்து சென்று அருகிலிருந்த மணலை கொண்டு சாலையில் சிந்திய ஆயில் மீது கொட்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வாகனங்கள் வழக்கம் போல சென்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்