search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Economics Forum"

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • விவேகம் குரூப்ஸ் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் அன்னம் அகாடமியின் இயக்குநர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொடக்க உரை நிகழ்த்தினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். விவேகம் குரூப்ஸ் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் அன்னம் அகாடமியின் இயக்குநர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொடக்க உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில் பொருளியல் பாடப்பிரிவின் சிறப்பையும், பொருளியல் மாணவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளையும், அதனை திட்டமிட்டு பயன்படுத்துவது எப்படி? என்பதையும் விளக்கி பேசினார். உதவிப்பேராசிரியர் சிவஇளங்கோ சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். மாணவர் செயலர் சாமுவேல் நன்றி கூறினார்.

    விழாவில் பேராசிரியர்கள் கணேசன், சிவமுருகன், முருகேஸ்வரி, மருதையா பாண்டியன், அசோகன், உமா ஜெயந்தி, பிரியதர்ஷினி மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வழிகாட்டுதல்படி பொருளியல்துறை தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×