என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்ற தொடக்கவிழா
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
- விவேகம் குரூப்ஸ் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் அன்னம் அகாடமியின் இயக்குநர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொடக்க உரை நிகழ்த்தினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். விவேகம் குரூப்ஸ் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் அன்னம் அகாடமியின் இயக்குநர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொடக்க உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில் பொருளியல் பாடப்பிரிவின் சிறப்பையும், பொருளியல் மாணவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளையும், அதனை திட்டமிட்டு பயன்படுத்துவது எப்படி? என்பதையும் விளக்கி பேசினார். உதவிப்பேராசிரியர் சிவஇளங்கோ சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். மாணவர் செயலர் சாமுவேல் நன்றி கூறினார்.
விழாவில் பேராசிரியர்கள் கணேசன், சிவமுருகன், முருகேஸ்வரி, மருதையா பாண்டியன், அசோகன், உமா ஜெயந்தி, பிரியதர்ஷினி மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வழிகாட்டுதல்படி பொருளியல்துறை தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்