search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diseases"

    பால்வினை நோயின் பாதிப்பில் இருந்து எவ்விதம் தற்காத்து கொள்வது? அதற்குரிய சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மனிதனின் ஆரோக்கியத்தை பாதித்து வாழ்நாளை குறைக்கும் பல்வேறு நோய்களில், பால்வினை நோயும் ஒன்று. இந்நோய் உலகம் முழுவதும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் பால்வினை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    பொதுவாக பால்வினை நோய் பாதிப்புகளுக்கு முறையற்ற புணர்ச்சி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு, பல துணைகளுடன் உடலுறவு, ஓரினச்சேர்க்கை போன்றவை காரணமாக இருக்கிறது. இந்நோயின் பாதிப்பில் இருந்து எவ்விதம் தற்காத்து கொள்வது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்.

    இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை பால்வினை நோய் மருத்துவ அலுவலர் கலாவதி கூறியதாவது:-

    பால்வினை நோய்கள்

    ஆண் மற்றும் பெண்ணின் பிறப்பு உறுப்புகளில் கிருமி தொற்றால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தான் பால்வினை நோய்கள் ஆகும். இதன் கிருமி தொற்று ஆண்களை பொறுத்தவரை, வெள்ளைப்படுதல், பிறப்பு உறுப்புகளில் புண் ஏற்படுதல், அரிப்புடன் கூடிய வீக்கம், தொடை இடுக்குகளில் வீங்குதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதுதவிர பிறப்பு உறுப்புகளில் மருக்கள் தோன்ற வாய்ப்புண்டு.

    பெண்களை பொறுத்தவரை, மேற்கூறிய அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இதுபோன்ற பால்வினை நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால் அலட்சியப்படுத்தக்கூடாது. டாக்டரிடம் சென்று அதற்குரிய பரிசோதனை செய்து முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

    10-க்கும் மேற்பட்ட...

    பால்வினை நோய்களை பொறுத்தவரை, சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்றவை முக்கிய கிருமி தொற்று ஆகும். இதுதவிர டெனிடல் அல்சர் என்ற கிருமி தொற்றும் உண்டு. இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாதிப்பை ஏற்படுத்தும். பால்வினை நோய்களை கண்டறிய வி.டி.ஆர்.எல். என்ற பரிசோதனை இருக்கிறது.

    இந்த பரிசோதனை செய்தால் பால்வினை நோய்க்கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய முடியும். ஆண், பெண் ஆகிய இருவரில் ஒருவருக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டாலும் கூட இருவரும் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    30 நாள் சிகிச்சை

    ஒருவருக்கு பால்வினை நோய் கிருமி தாக்குதலை கண்டறிய வி.டி.ஆர்.எல். பரிசோதனை மேற்கொள்ளும் போது அதனுடன் எச்.ஐ.வி. (எய்ட்ஸ் கிருமி) உள்ளதா? என்பதை கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதுபோன்ற பரிசோதனையின் முடிவுகள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. பரிசோதனையின் முடிவில் பால்வினை நோய் கிருமி அல்லது எச்.ஐ.வி. நோய் கிருமி தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக தொடங்க வேண்டும்.

    பொதுவாக கிருமி தொற்றின் தாக்குதல் எந்த அளவுக்கு உள்ளதோ? அல்லது எந்த வகையான கிருமி தொற்றால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது? என்பதை பரிசோதனையின் கண்டறிந்தவுடன் குறைந்தபட்சம் 7 நாட்கள் அல்லது 21 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 30 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படும்.

    குணப்படுத்தக்கூடிய நோய்

    பால்வினை நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் மாத்திரைகளை தவறாமல் உண்ண வேண்டும். ஆணும், பெண்ணும் ஒன்று சேராமல் விலகி இருத்தல் அவசியம். டாக்டர் கூறிய அனைத்து சிகிச்சை முறைகளையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் டாக்டரின் அறிவுரைப்படி நடக்காமல் போனால் சிகிச்சை எடுத்தும் பலன் இன்றி போகும்.



    பொதுவாக பால்வினை நோய் என்பது தீர்க்க முடியாத நோய் அல்ல. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோய்தான்.

    அலட்சியம் கூடாது

    ஒருவருக்கு பால்வினை நோய் ஏற்பட்டு சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருந்தால் அது எச்.ஐ.வி. நோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுபோன்று எச்.ஐ.வி. நோய்கிருமி தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர் சிகிச்சையையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து விட்டால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக 100-ல் 99 சதவீதம், ஆண், பெண் முறையற்ற புணர்ச்சியால் மட்டுமே பால்வினை நோய் தாக்க வாய்ப்புண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரே ஒரு சதவீதம் மட்டுமே, பால்வினை நோய் உள்ள ஒருவரின் ரத்தத்தை அடுத்தவருக்கு செலுத்துவதால் அந்நோய் அவருக்கு வர வாய்ப்பு உண்டு. ஆனாலும் இப்போது பலவகையான பரிசோதனைகளுக்கு பிறகே ஒருவரின் ரத்தம் அடுத்தவருக்கு செலுத்தப்படுகிறது. அதனால் அந்த வகையிலும் பால்வினை நோய் தாக்குவதற்கும் வாய்ப்பு குறைந்து விட்டது.

    கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

    பொதுவாக பால்வினை நோயை பொறுத்தவரை பெண்களுக்கு கூடுதலாக ஒரு பிரச்சினை ஏற்படக்கூடும். அது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதல் ஆகும். பால்வினை நோய் தாக்கிய பெண்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது நாளடைவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அதனால் பெண்கள் இதில் சற்று அதிக கவனமாக இருக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆரம்பத்திலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதலை கண்டறிந்து விட்டால் அதனை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.

    மீண்டும் பரிசோதனை

    பொதுவாக பால்வினை நோய் தாக்குதலுக்கு ஆளானவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் முற்றிலும் நோய் தாக்குதலில் இருந்து விடுபட்டு விட்டோம் என்று இருந்து விடக்கூடாது. சிகிச்சை நாட்கள் முடிந்த பிறகு டாக்டரை அணுகி மீண்டும் பரிசோதனை செய்து கொள்வதும், அறிவுரைகளை கேட்டு அதன்படி நடப்பதும் அவசியம்.

    பொதுவாக ஆண், பெண் சேர்க்கையில் ‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்று முன்னோர்கள் கூறிய நல்லொழுக்க முறையை கடைபிடித்து வந்தால் இதுபோன்ற பால்வினை நோய் பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும்.
    நவக்கிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும். எந்த நேரமும் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசும் இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

    அரசனுக்கே அறிவுரை கூறி ஆட்சியை வழிபடுத்தும் சக்தியைத் தருவது புதன் கிரகம். ஒருவர் ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த நபரிடம் ஆலோசனைக் கேட்க பலரும் காத்திருப்பார்கள். அந்த நபர் மருத்துவம், ஜோதிடம், இசை, ஆயக்கலைகள், கைகடிகாரம், மோட்டார் தொழில் நுட்ப அறிவு போன்றவற்றில் ஞானம் உடையவராக இருப்பார். புதன் கிரகம் ஒருவருக்கு கவர்ச்சி நிறைந்த கம்பீர தோற்றம் தந்து அவரை வசீகரிக்க வைக்கும். பிறரால் முடியாத வேலைகளைக் கூட புதன் யோகம் பெற்றவர்கள் எளிதாக செய்து விடுவார்கள். கணித சாஸ்திரம், வான சாஸ்திரம், கணினி துறையில் சிறப்புற்று விளங்குவர். நாட்டு வைத்தியம் செய்பவராக இருந்தால், கைராசியானவர் என்று பெயர் எடுப்பார்கள்.

    புதன் யோகம் அல்லது உச்சம் பெற்றவர்கள், நவபாஷாணம் மற்றும் ரசவாத கலைகளிலும், யோகா மற்றும் தியான கலைகளிலும் வல்லுனராக இருப்பார்கள். மிகப்பெரிய பல்பொருள் அங்காடிக்கு அதிபதியாகும் வாய்ப்பு புதனால் வரக்கூடியதுதான். நினைத்ததும் கவிபாடும் திறன், இலக்கண இலக்கிய அறிவு போன்றவற்றைத் தருபவரும் புதனே. கோவில்களில் இருக்கும் சிற்ப வேலைபாடுகளுக்குரிய அறிவைத் தருபவரும் புதன் தான். புதன் ஆதிக்கம் பெற்றவர்கள், மேஜிக் மற்றும் வேடிக்கை நிகழ்வு களை நடத்துபவராக இருப்பார்கள். ஒருவர் பல ஆண்டுகளாக பத்திரிகை தொழிலில் முதன்மை பெற்றவராக திகழவும் புதனே காரணமாக உள்ளார்.
    நவக்கிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. புதன் கிரக பாதிப்பால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.
    புதன் கிரக பாதிப்பால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.

    நமது உடலில் தலை முதல் பாதம் கடைசி வரை செல்லும் நரம்புகளுக்கு எல்லாம் ஒட்டு மொத்த அதிபதி புதனே ஆகும். நரம்புகளில் ரத்தம் உறைவதும், ரத்தம் கசிவுகளுக்கும் புதனே காரணமாக உள்ளார். தலைக்கு செல்லும் ரத்தம் குறைந்தாலும், அதிக ரத்தம் சென்றாலும் அதற்கும் புதன் தான் காரணம். வலிப்பு நோய், கை- கால் முடக்கம், மனநிலை பாதிப்பு, திருநங்கையாக மாறுதல் ஏற்பட, தாய் வழி, தாய்மாமன் வழி, பரம்பரை நோய்கள் வருவது போன்றவற்றிற்கு புதனே காரணம் ஆவார். தூசி, மாசுகளால் ஏற்படும் நோய்கள், அலைச்சல்களால் ஏற்படும் நோய்கள், உடலில் வாயு தொல்லையால் தசைப் பிடிப்பு அல்லது நரம்பு இழுத்து பிடிப்பது போன்றவற்றிற்கு புதனே பொறுப்பு.

    தனிமையில் சுயஇன்பம் காணும் ஆவலை தூண்டும் கிரகம் புதன் ஆகும். ஓரினச் சேர்க்கைகள் மூலம் உண்டாகும் நோய்கள், பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மூலம் உண்டாகும் நோய்கள், விஷ வாயு தாக்கி கை, கால்கள் செயல் இழப்பு மற்றும் மூளை சாவு, அறிவுக்கும் புத்திக்கும் தெரிந்தே செய்யும் செயல்களால் வரக்கூடிய நோய்கள் அனைத்துக்கும் புதனே காரணமாக திகழ்கிறார்.

    ஜாதகத்தில் புதன் தரும் பலன்

    * புதன் கிரகம் தனது பகை ராசியான கடகத்தில் நின்று இருந்தால், நரம்பு தளர்வு, பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரலாம்.

    * புதன் நீச்ச ராசியான மீனத்தில் இருந்தால், வாயுத் தொல்லையால் கை கால் பிடிப்பு இருக்கும். ஞாபக சக்தி குறையும். தலை உச்சி பகுதியில் வலி இருக்கும்.

    * புதன் பகை கிரகமான சந்திரனுடன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபருக்கு திக்கு வாய் ஏற்பட வாய்ப்புண்டு. காலநிலைக்கு ஏற்றவாறு தொற்று நோய்கள் வரலாம். போதை வஸ்துகளாலும் நோய்கள் வரக்கூடும்.

    * புதன் பகை கிரகமான சந்திரனின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் உடலில் கெட்ட நீர் சேரும். எந்த நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால், புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல நடந்துகொள்வார். அடிக்கடி தலைவலி வரும்.

    * புதன், லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், புதன் மறைவைக் குறிப்பதாகும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு நரம்புக்குழாயில் கெட்ட கொழுப்பு அடைப்பு, உடல் சோர்வுகள், மயக்க நிலை, புது வகையான நோய்கள் தென்படும்.

    * புதன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியுடன் இணைந்து, அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த நபரின் புத்தியும் செயலும் கெட்ட வழியில் சென்று நோய்களை தேடிக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

    * புதன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ ஜாதகருக்கு நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. வாத நோய் உண்டாகும். பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். தலை உச்சியில் நரம்பு முடிச்சில் பாதிப்பு வரக்கூடும்.

    * புதனே லக்னத்திற்கு பாவியாக அமைந்து பாதக ஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு அடிக்கடி புத்தி தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் உண்டாக்குவார். சோம்பேறியாக இருப்பதுடன் நோய் நீங்குவதற்காக எந்த முயற்சிகளும் செய்யமாட்டார்.

    * புதன் பகை கிரகங்கள் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது பாதாதி பதியுடன் பார்வை இருந்தால் புதிய தொற்று நோய்கள் தாக்கக்கூடும். நோய் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வார்கள்.

    -ஆர்.சூரியநாராயணமூர்த்தி 
    இரவு தூங்காமல் கண்விழித்து வேலைப்பார்ப்பவர்கள் ஆரோக்கியம் அதிக அளவு பாதிக்கப்பட்டு நோய்கள் ஏற்படும் என புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஏற்பட்டுள்ளது. #research
    வாஷிங்டன்:

    உலகில் உள்ள மக்கள் பரப்பரப்பான் சூழ்நிலையில் வேலைப்பார்த்து வரும் நிலையில் அவர்களுக்கு இரவு, பகல் என்பது தெரியாமல் போனது. அதனால் அவர்கள் இரவு கண்விழித்து பணிபுரிகின்றனர். இரவு தூங்காமல் கண்விழித்து பணிபுரிவதால் பல் நோய்கள் ஏற்படும் என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஆய்வின் படி, இரவில் வேலைப்பார்க்கும் போது ரத்தத்தில் உள்ள புரோட்டின் அதிகரிக்கிறது. அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. இதனால் எளிதாக நோய்கள் ஏற்படுகின்றன. இது மற்றவர்களை விட இரவு பணியில் ஈடுபடுவர்களை விட அதிகமாக ஏற்படுகிறது.

    இந்த ஆய்வில் மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரோட்டின் சோதனை செய்யப்பட்டது. 24 மணி நேரத்தில் தூக்கம், உணவு நேரங்களில் புரோட்டினின் அளவு எவ்வாறு இருக்கிறது என்பதன் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. இது இரவில் வேலைப்பார்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #research
    ×