search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhruva natchathiram"

    விக்ரம் நடிப்பில் உருவாகும் `துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது #DhruvaNatchathiram #Vikram
    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்'. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். 

    இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. 

    இந்த நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.



    கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் இருந்து `ஒரு மனம்' என்ற சிங்கிள் டிராக் ஒன்று விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    படத்தின் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னமும் 18 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. #DhruvaNatchathiram #Vikram

    என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என பிசியாக இருக்கும் கவுதம் மேனன், ரஜினியுடன் இணைவதை யாரோ தடுத்துவிட்டனர் என வருத்தம் தெரிவித்துள்ளார். #GauthamMenon #Rajinikanth
    தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். தனுசை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என பிசியாகி இருக்கும் கவுதம் மேனன் ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியிருக்கிறார்.

    அந்த திட்டம் என்ன ஆனது என்பது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் ‘துருவ நட்சத்திரம்’ கதையைத்தான் ரஜினியிடம் கூறினேன். தயாரிப்பாளர் தாணு கூட்டிக்கொண்டு போனார்.

    காலையில் கதையைக் கேட்டவுடன், ‘சூப்பராக இருக்கு. யார் எல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள், எத்தனை நாள் தேவைப்படும்’ என்று கேட்டார். ‘படம் பண்ணலாம். நீ யாரிடமும் சொல்லாதே. செய்தி தீயா பத்திக்கும். வீட்டில் மட்டும் சொல்லிடு’ என்று சந்தோ‌ஷமாக என்னை அனுப்பி வைத்தார் தாணு.



    நானும் என் குழுவினருடன் அமர்ந்து எப்படிப் பண்ணலாம் என்று உடனே திட்டமிட்டுக் கொண்டு இருந்தேன். மாலையில் தாணு சார் போனில் ‘இல்லை... ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். ரஜினிகிட்ட யாரோ ஏதோ சொல்லியிருக்கிறார்கள். இப்போது நடக்காது.

    நான் ரஞ்சித்தை வைத்து பண்ணப்போறேன்’ என்று சொன்னார். இதுதான் நடந்தது. யார் என்ன சொன்னாங்க என்று எதுவுமே தெரியாது. நல்லவங்க யாரோ ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் தெரியும்’ என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார். ரஜினியை கவுதம் மேனன் இயக்குவதை தடுத்தது யார்? என்ற கேள்வி தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. #GauthamMenon #Rajinikanth

    நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்ட பார்த்திபன் எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார். #Parthiban
    நடிகர், இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான சிந்தனைக்காக மட்டும் அல்லாமல் சமூக அக்கறைக்காகவும் பாராட்டப்படுபவர். அவர் அரசியலுக்கு வரப்போவதாக செய்தி வர, இதுகுறித்து பார்த்திபனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,

    ‘பெசண்ட் நகரில் ஒரு படகு போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டேன். பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து அந்த குப்பைகள் போடப்படுவதால் மீனவர்களின் வலைகளில் 20 சதவீதம் தான் மீன்கள் கிடைக்கின்றன. 80 சதவீதம் பிளாஸ்டிக் பைகளும் பாட்டில்களும் தான் வருகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடலில் இருந்து எடுக்கப்படும் கழிவுகள் மீண்டும் கடலுக்குள் செல்வதை தவிர்க்க ஒரு யோசனை கூறினேன்.

    என்னுடைய சொந்த செலவில் பெரிய பெரிய பைகள் வாங்கி தருகிறேன் என்றும் அவற்றின் மூலம் அப்புறப்படுத்தலாம் என்றும் கூறினேன். அப்போது நிருபர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை பற்றி கேட்டபோது ‘நான் அரசியலுக்கு வரும்போது சொல்கிறேன்’ என்றேன்.



    எப்போது என்று கேட்டால் நான் சமூக செயற்பாட்டில் இருப்பதால் இப்போதே அரசியலில் தான் இருக்கிறேன். காலம் வரும்போது நிச்சயம் முழுநேர அரசியலுக்கு வருவேன். கட்சி தொடங்குவது முக்கியம் அல்ல. சமூகத்துக்கு அவரவர்கள் பங்களிப்பை இதுபோல செய்தால் போதும்.

    குப்பத்து ராஜாவில் வடசென்னை சேரிப்பகுதியில் வாழும் கதாபாத்திரம், திட்டம் போட்டு திருடற கூட்டம் படத்தில் வித்தியாசமான திருடர் கூட்ட தலைவன், துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷான ஒரு வேடம். மூன்றுமே வேறு வேறு விதமான கதாபாத்திரங்கள். என்னுடைய கதாபாத்திரங்களை தேர்வு செய்யும்போது அந்த வேடம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இந்த படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி இருக்க வேண்டியவை. தாமதம் ஆனதால் கடந்த ஆண்டு எனக்கு படமே இல்லாதது போல் ஆகி விட்டது.

    எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில் வரும். #Parthiban

    கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. #Vikram #ChiyaanVikram
    புதிய படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது படம் தயாரிப்பில் இருக்கும்போதும், தொழில்நுட்ப பணிகள் நடக்கும்போதும் சமூக வலைத்தளத்தில் கசிந்து விடுகின்றன.

    மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் முக்கிய காட்சிகள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டிரெய்லரை உருவாக்கி விரைவில் சமூக வலைத்தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் முன்னதாகவே அந்த டிரெய்லரை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி வேறு வழியின்றி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்தார்கள்.



    துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோரும் நடிக்கின்றனர். கவுதம் மேனன் இயக்குகிறார். துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்துள்ளது. 
    கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்திருக்கிறார். #DhruvaNatchathiram #Vikram
    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்'. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். 

    இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. 



    கடந்த ஆண்டே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போயுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு முடிவடையாததால் படம் ரீலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. 

    இந்த நிலையில், இன்று படத்தின் டீசரின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, 



    `ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பயணம் உண்டு. இந்த படத்திற்கும் தான் நீண்ட, அழகான பயணம் இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் போது நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அது எளிதாக முடிந்து விடாது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

    ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். #DhruvaNatchathiram #Vikram

    ×