என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cyber crime police"
- சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது
- இப்பயிற்சியில் தேனி மாவட்ட எஸ்.பி போலீசாருக்கு பல்வேறு செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உயர்அதிகாரிகளின் உத்தரவுப்படி சைபர் உதவி அலுவலர்கள் எனப்படும் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசாரை கொண்ட 31 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினருக்கு சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் சைபர் கிரைம் உதவி எண் மற்றும் இணையதளம் மூலம் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சி வகுப்பில் ஏ.டி.எஸ்.பி கார்த்தி, இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தாமரைக்கண்ணன், அழகுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கடனுக்கான தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், செலுத்த தவறினால் உங்களின் படம் ஆபாசமாக வெளியிடப்படும் என செல்போனில் பேசியவர் தெரிவித்தார்.
- மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில் அந்த கும்பல் என் படத்தை மார்பிங், கிராபிக் செய்து எனக்கும், உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அனுப்பி மிரட்டுகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த முத்து மகன் விஷ்ணுபிரியன் (வயது 25). மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எலக்ட்ரீசியனாக பணியாற்றி வரும் எனது செல்போன் வாட்ஸ்அப்புக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு புது எண்ணில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. மற்றொரு எண்ணில் இருந்து பேசிய நபர் தாங்கள் வாங்கிய கடனுக்கு தவணை கட்ட வேண்டும், இது தொடர்பான செயலியில் சென்று பார்த்தால் விவரங்கள் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மெசேஜ் வந்த செல்போன் எண்ணில் நான் தொடர்பு கொண்ட போது கடனுக்கான தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், செலுத்த தவறினால் உங்களின் படம் ஆபாசமாக வெளியிடப்படும் என அதில் பேசியவர் தெரிவித்தார்.
மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில் அந்த கும்பல் என் படத்தை மார்பிங், கிராபிக் செய்து எனக்கும், உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அனுப்பி மிரட்டுகின்றனர். எனவே பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த செல்போன் எண்கள் யாருடையது , எங்கிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணை முடிவில் இதில் தொடர்புடைய பெரிய கும்பல் சிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனேயே பொது இடங்கள் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகள் சின்னம் ஆகியவை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும் ஈரோடு கலெக்டர் அலுவலகம், அனைத்து துறை அலுவலகங்களிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அகற்றப்பட்டுவிட்டன.
நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வீடியோ பார்வை குழுக்கள், கணக்கு குழுக்கள் ஆகிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் தற்போது வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதே போன்று வீடியோ குழுவினர் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்கள் புகார்களை படத்துடன் தெரிவிக்க தனியாக வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் புகார் கூற விரும்பும் பொதுமக்கள் படத்துடன் புகார் கூறலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த நிலையில் சமூக வலை தளங்களான வாட்ஸ்- அப், பேஸ்புக் ட்விட்டர் இன்டோஸ்க்ராம் போன்ற சமூக வலைத்தளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தவறான தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். உதாரணமாக ஒரு சிலர் எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்து விடுவதாக விளம்பரம் செய்வார்கள்.
இவ்வாறு விளம்பரம் செய்வது தண்டனைக்குரியது. இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்