என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » cows smuggling increased
நீங்கள் தேடியது "cows smuggling increased"
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பாதுகாப்பான முறையில் இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
தேவதானப்பட்டி:
கேரளாவில் இறைச்சிக்காக மாடுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இதற்காக தமிழகத்தில் உள்ள மாட்டு சந்தைகளில் குவியும் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு மாடுகளை வாங்கி வேன்கள் மற்றும் லாரிகளில் கொண்டு செல்வார்கள்.
மாநில எல்லையில் விலங்குகள் நல அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் இதுபோன்று மாடுகள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
மாடுகள் எங்கிருந்து வாங்கப்பட்டது, அதற்கான சான்றுகள், அதிக அளவிலான மாடுகளை அடைத்து வைத்து செல்லக்கூடாது. லாரிகளில் மாடுகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கெடுபிடிகளை சுட்டிகாட்டி மாடுகள் கடத்துவதை தடுத்து வந்தனர்.
இதனால் தற்போது நூதன முறையில் மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகிறது. மாடுகள் கொண்டு செல்லப்படும் லாரி முழுவதும் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது உள்ளே வேறு ஏதேனும் சரக்குகள் உள்ளது என்றுதான் எண்ணத்தோன்றும்.
இது குறித்து லாரி ஓட்டுனர்கள் தெரிவிக்கையில், மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்லும்போது அடிக்கடி அதனை மறித்து பறிமுதல் செய்து விடுகின்றனர்.
இதனால் வியாபாரிகளுக்கு நாங்கள் பதில்சொல்ல முடியாமல் தவித்து வந்தோம். தற்போது கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க லாரி முழுவதும் கவர் செய்யப்பட்டு கொண்டு செல்கிறோம். இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படுவதில்லை. சோதனைச்சாவடியில் மட்டும் மாடுகளை காட்டினால் போதுமானதாக உள்ளது என்று தெரிவித்தனர்.
கேரளாவில் இறைச்சிக்காக மாடுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இதற்காக தமிழகத்தில் உள்ள மாட்டு சந்தைகளில் குவியும் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு மாடுகளை வாங்கி வேன்கள் மற்றும் லாரிகளில் கொண்டு செல்வார்கள்.
மாநில எல்லையில் விலங்குகள் நல அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் இதுபோன்று மாடுகள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
மாடுகள் எங்கிருந்து வாங்கப்பட்டது, அதற்கான சான்றுகள், அதிக அளவிலான மாடுகளை அடைத்து வைத்து செல்லக்கூடாது. லாரிகளில் மாடுகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கெடுபிடிகளை சுட்டிகாட்டி மாடுகள் கடத்துவதை தடுத்து வந்தனர்.
இதனால் தற்போது நூதன முறையில் மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகிறது. மாடுகள் கொண்டு செல்லப்படும் லாரி முழுவதும் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது உள்ளே வேறு ஏதேனும் சரக்குகள் உள்ளது என்றுதான் எண்ணத்தோன்றும்.
இது குறித்து லாரி ஓட்டுனர்கள் தெரிவிக்கையில், மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்லும்போது அடிக்கடி அதனை மறித்து பறிமுதல் செய்து விடுகின்றனர்.
இதனால் வியாபாரிகளுக்கு நாங்கள் பதில்சொல்ல முடியாமல் தவித்து வந்தோம். தற்போது கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க லாரி முழுவதும் கவர் செய்யப்பட்டு கொண்டு செல்கிறோம். இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படுவதில்லை. சோதனைச்சாவடியில் மட்டும் மாடுகளை காட்டினால் போதுமானதாக உள்ளது என்று தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X