search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress leader rahul gandhi"

    பிரதமர் மோடி அவரது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #MannKiBatt #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த மாதம் விவசாயிகளுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், தனது விவசாய வருமானம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என கூறும்படி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், பிரதமர் மோடி தனது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஆனால், அது அவரது மனதின் குரலாக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புவது போல் தெரிகிறது. அவர் கூறியது போல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. இது சத்தீஸ்கர் பெண்மணி விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    மேலும், சத்தீஸ்கர் பெண் கூறியதாக வெளியான வீடியோவையும் தனது பதிவில் இணைத்துள்ளார். #PMModi #MannKiBatt #RahulGandhi
    ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, 70 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் என்ன செய்தது? என ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார். #Jaipur #Amitshah #RahulGandhi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் பங்கேற்றார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: 

    சமீப காலமாக நடைபெற்ற எட்டு இடைத்தேர்தல்களில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், அவர்களுக்கு எதிராக இன்னும் 14 மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வருகிறோம்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டியது, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கியது என பல்வேறு மக்கள் நலப்பணிகள் என பட்டியல் நீளுகிறது. ஆனால், ராகுல் இது போதாது, அது போதாது என்கிறார்.



    நீங்கள் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்?  மூன்று தலைமுறைகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் எதுவும் செய்யாததால் தான் எங்களால் மக்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்க முடிந்தது, ஏழைத் தாய்மார்களுக்கு சிலிண்டர்களை வழங்க முடிந்தது.      

    அவர் விடுமுறைக்கு எங்கு செல்கிறார் என்பதும், எங்கிருந்து வருகிறார் என்பதும் யாருக்கும் தெரியாது என குற்றம் சாட்டினார். #Jaipur #Amitshah #RahulGandhi 
    ×