search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College girl"

    மேற்கு வங்காளம் மாநிலம் டம் டம் மத்திய சிறைச்சாலையில் உள்ள தனது காதலனுக்காக ஹெராயின் கடத்திய கல்லூரி மாணவியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் பரசாத் பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா மாலாகர்(22). கல்லூரியில் பயின்று வரும் இவர் பாகிராத் சர்கார் என்பவரை காதலித்து வருகிறார். சர்கார் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டம் டம் மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நேற்று மாலை சர்காரை பார்ப்பதற்கு சுஷ்மிதா சென்றார். அப்போது தனது காதலனுக்கு கொடுப்பதற்காக ஹெராயினை கொண்டு சென்றார். அவரை சோதனை செய்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்று பல முறை நடத்தப்பட்ட சோதனைகளில் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள், செல்போன் மற்றும் சமையல் பொருட்கள் கடத்திச் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்படுவர். ஆனால், தனது காதலனுக்கு ஒரு கல்லூரி மாணவி ஹெராயின் கடத்திச் சென்றது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி அருகே 2-ம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ‌ஷர்மிலி (வயது 18). கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் ‌ஷர்மிலி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை ரமேஷ் மாட்டு பால் கறக்க தோட்டத்துக்கு சென்றுவிட்டார்.

    அவர் வீட்டுக்கு திரும்ப வந்த போது கதவு மூடப்பட்டு கிடந்தது. திறந்து பார்த்த போது உள்ளே இருந்த அறையின் மின் விசிறி கொக்கியில் தனது துப்பட்டாவால் ‌ஷர்மிலி தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கல்லூரி மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×