search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கோபி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    கோபி அருகே 2-ம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ‌ஷர்மிலி (வயது 18). கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் ‌ஷர்மிலி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை ரமேஷ் மாட்டு பால் கறக்க தோட்டத்துக்கு சென்றுவிட்டார்.

    அவர் வீட்டுக்கு திரும்ப வந்த போது கதவு மூடப்பட்டு கிடந்தது. திறந்து பார்த்த போது உள்ளே இருந்த அறையின் மின் விசிறி கொக்கியில் தனது துப்பட்டாவால் ‌ஷர்மிலி தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கல்லூரி மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×