search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "citizens"

    • சாயத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மொடக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
    • எங்களது கோரிக்கையை ஏற்காமல் அனுமதி அளித்தால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.

    மொடக்குறிச்சி, ஜூலை.19-

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டு பாளையம் பகவதி நகரில் அமைய உள்ள சாயத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

    தொடர்ந்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியான காட்டு பாளையம் பகவதி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சாயத் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதி வழங்க முயற்சி நடப்பதாகவும் தெரியவருகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் சாய தொழிற்சாலை அமைய கட்டிட அனுமதி மற்றும் போர்வெல் அமைப்பதற்கான அனுமதி வழங்க இருப்பதாகவும் அறிந்தோம்.

    எனவே குறித்து சாயத் தொழிற்சாலையை தொடங்க அனுமதிக்க கூடாது இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கெட்டுவிடும். மேலும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என்று பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம் .

    இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் 4-வது தீர் மானமாக கட்டிடத்திற்கு மற்றும் போர்வல் அமைக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிந்து அனைவரும் இங்கு வந்துள்ளோம்.

    இதற்கு அனுமதிக்க கூடாது என்று பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் எங்களது கோரிக்கையை ஏற்காமல் அனுமதி அளித்தால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.

    பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். எனவே அமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    நார்வேயில் பிறப்பு வீதம் குறைவாக இருந்தால் இனி வரும் காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தேவை என பிரதமர் கூறி உள்ளார். #NorwegianPM
    ஆஸ்லோ:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் எர்னா சோல்பெர்க் என்ற பெண் தலைவர் பிரதமராக உள்ளார்.

    சமீபத்தில் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார். அந்தச் செய்தியில் அவர், “நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள்தான். இதை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்” என கூறி உள்ளார்.

    மேலும் “இனி வரும் காலத்தில், இதேபோல் நாடு இருந்தால் (பிறப்பு வீதம் குறைவாக இருந்தால்) நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்” எனவும் அவர் எச்சரித்தார்.

    இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக நார்டிக் நாடுகள் என்று அழைக்கப்படக்கூடிய நார்வே, சுவீடன், டென்மார்க் , பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் குழந்தைகள் பிறப்பு வீதம் குறைவாக உள்ளது. #NorwegianPM
    ×