search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheranmahadevi"

    சேரன்மகாதேவி அருகே அடிக்கடி மது குடித்து வந்து தகராறு செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவி அருகே உள்ள புத்தார யாதவர் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று மலையில் விஷம் குடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  

    இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மாரியப்பன் இறந்தார். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×