என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » building collapse
நீங்கள் தேடியது "building collapse"
ஈரானின் மேற்கு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர். #IranEarthquake
தெஹ்ரான்:
இந்த விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பலருக்கு லேசான காயங்களே ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் தாக்கிய இடங்களில் 6 மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #IranEarthquake
ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணம், சர்போல் இ ஸகாப் அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் தாக்கிய இடங்களில் 6 மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #IranEarthquake
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியானார். மேலும் 17 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். #BuildingCollapse
லக்னோ :
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டதாக முதல் கட்டமாக தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 17 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலியானார் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் ரன்வீர் பிரசாத் ஊடகங்களிடம் கூறுகையில், ’கட்டிட விபத்து தொடர்பாக விசாரணை நடத்தபட்டுள்ளது. கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் தெரிவித்தார். #BuildingCollapse
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டதாக முதல் கட்டமாக தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 17 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலியானார் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் ரன்வீர் பிரசாத் ஊடகங்களிடம் கூறுகையில், ’கட்டிட விபத்து தொடர்பாக விசாரணை நடத்தபட்டுள்ளது. கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் தெரிவித்தார். #BuildingCollapse
டெல்லியில் மூன்றடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. #childrenkilled #Delhibuildingcollapse
புதுடெல்லி:
டெல்லியின் வடமேற்கில் உள்ள அசோக் விஹார் பகுதியில் ஒரு மூன்றடுக்கு மாடி வீடு இன்று காலை 9.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்துவந்த பல குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து சிலரை காயங்களுடன் மீட்டனர். மேலும், 10 வயதுக்குட்பட்ட இரு சகோதர்கள், 5 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரி, ஒரு பெண் ஆகிய 5 பேர் பிரேதமாக மீட்கப்பட்டனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், மூன்றடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இடிபாடுகளில் சிக்கி இறந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, வீடு இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தனர்.
சுமார் 20 ஆண்டுகள் பழைமையான அந்த கட்டிடத்தை கடந்த 3 வாரங்களுக்கு முன் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #childrenkilled #Delhibuildingcollapse
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X