என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bomb exploded
நீங்கள் தேடியது "bomb exploded"
விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 வயது சிறுமி உயிர் தப்பினார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 25). தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (21). இவர்களுக்கு தன்ஷிகா (2) என்கிற பெண் குழந்தை உள்ளது.
நாய் ஒன்றை பாஸ்கர் வளர்த்து வருகிறார். நேற்று மாலை அந்த நாயுடன் வீட்டு முன்பு தன்ஷிகா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது நாய் திடீரென அருகில் உள்ள வயலுக்கு ஓடிசென்று அங்கு உருண்டை வடிவில் கிடந்த மர்ம பொருளை கடித்தது.
அந்த மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது.
நாயை பின்தொடர்ந்து சிறுமி தன்ஷிகா செல்லாமல் வீட்டு முன்பு நின்றதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.
இது குறித்து காணை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். நாயின் உடல் மற்றும் சிதறிக்கிடந்த வெடிமருந்து துகள்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அதில், நெல் பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக விவசாயி ஒருவர் தனது நிலத்தில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை நாய் கடித்தபோது, அது வெடித்து நாயின் வாய் பகுதி சிதைந்து இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 25). தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (21). இவர்களுக்கு தன்ஷிகா (2) என்கிற பெண் குழந்தை உள்ளது.
நாய் ஒன்றை பாஸ்கர் வளர்த்து வருகிறார். நேற்று மாலை அந்த நாயுடன் வீட்டு முன்பு தன்ஷிகா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது நாய் திடீரென அருகில் உள்ள வயலுக்கு ஓடிசென்று அங்கு உருண்டை வடிவில் கிடந்த மர்ம பொருளை கடித்தது.
அந்த மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது.
நாயை பின்தொடர்ந்து சிறுமி தன்ஷிகா செல்லாமல் வீட்டு முன்பு நின்றதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.
இது குறித்து காணை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். நாயின் உடல் மற்றும் சிதறிக்கிடந்த வெடிமருந்து துகள்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அதில், நெல் பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக விவசாயி ஒருவர் தனது நிலத்தில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை நாய் கடித்தபோது, அது வெடித்து நாயின் வாய் பகுதி சிதைந்து இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X