search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp president amit shah"

    பாஜகவின் சாதனைகளை விளக்கும் வகையில், பாஜக தலைவர் அமித்ஷா பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலை நேரில் சந்தித்தார். #BJP #AmitShah #SainaNehwal
    ஐதராபாத்:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தரக்கோரி பாஜகவினர்  சம்பர்க் சே சமர்தான் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா  உள்பட மத்திய மந்திரிகள், முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு பிரபலங்களை சந்தித்து வருகின்றனர்.  இந்த சந்திப்பின்போது, பாஜக அரசின் நான்கு ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படும்.

    அதன் ஒரு பகுதியாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றார். ஐதராபாத்தில் உள்ள பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வீட்டுக்கு அமித்ஷா சென்றார்.

    அவரை நேரில் சந்தித்து  பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கினார். அப்போது அவருடன் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். #BJP #AmitShah #SainaNehwal
    மேற்கு வங்காள மாநிலத்தில் உங்களின் எண்ணம் நிச்சயம் பலிக்காது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. #AmitShahinPurulia #MamataBanerjee
    கொல்கத்தா:

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு புரூலியா பகுதியில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், இங்கு தாதாக்கள் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது. மோடி தலைமையிலான ஆட்சியில் மட்டுமே வளர்ச்சியை காண முடியும். மேற்கு வங்காளத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவாகி வருகிறது. விரைவில் பா.ஜ.க. இங்கு ஆட்சியை பிடிக்கும் என கடுமையாக சாடியுள்ளார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் உங்களின் எண்ணம் நிச்சயம் பலிக்காது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.



    இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் வரவுள்ள தேர்தல்களை பற்றி மட்டுமே அமித்ஷா கவனத்தில் கொள்ள வேண்டும்.  பாஜகவினரின் பிரித்தாளும் கொள்கை மேற்கு வங்காளத்தில் எடுபடாது.

    பொதுவாக காலி பாத்திரங்கள் தான் அதிக சத்தம் போடும். புருலியா கூட்டத்தில் பேசிய அமித்ஷாவின் இன்றைய பேச்சும் அப்படித்தான் உள்ளது.
    குஜராத் மற்றும் மற்ற மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்து வருகிறோம் என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். #AmitShahinPurulia #MamataBanerjee
    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அமித்ஷா பேசுகையில், இங்கு தாதாக்கள் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது என கடுமையாக சாடியுள்ளார். #AmitShahinPurulia #MamataBanerjee
    கொல்கத்தா:

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு புரூலியா பகுதியில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    வன்முறை என்பது வங்காளத்தின் கலாசாரம் அல்ல. இந்த மாநிலத்தில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திர சட்டோபாத்யா உள்ளிட்ட பலர் அவதரித்துள்ளனர். ஆனால், மம்தா பானர்ஜி இங்கு வன்முறை கலாசாரத்தை நிறுவியுள்ளார்.

    சமீபத்தில் இங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நடுநிலை மக்களை ஓட்டளிக்க அரசு அனுமதிக்கவில்லை. இங்கு குண்டர்கள் ராஜ்யம் நடக்கிறது. வெடிகுண்டுகள் தயாரிப்பு இங்கு பெருகி வருகிறது. மணல், நிலக்கரி கொள்ளை அதிகரித்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு பதில் இங்கு குண்டர்களின் வளர்ச்சியே அபாரமாக உள்ளது.

    மத்திய நிதி கமிஷனில் இருந்து மத்திய அரசு 3. 6 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் இந்த நிதி மக்களுக்கு சென்று சேரவில்லை. மோடி தலைமையிலான ஆட்சியில் மட்டுமே வளர்ச்சியை காண முடியும்.

    மேற்கு வங்காளத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவாகி வருகிறது. விரைவில் பாஜக இங்கு ஆட்சியை பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார். #AmitShahinPurulia #MamataBanerjee
    ×