search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலி பாத்திரம் தான் அதிக சத்தம் போடும் - அமித்ஷா பேச்சுக்கு திரிணாமுல் காங். பதிலடி
    X

    காலி பாத்திரம் தான் அதிக சத்தம் போடும் - அமித்ஷா பேச்சுக்கு திரிணாமுல் காங். பதிலடி

    மேற்கு வங்காள மாநிலத்தில் உங்களின் எண்ணம் நிச்சயம் பலிக்காது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. #AmitShahinPurulia #MamataBanerjee
    கொல்கத்தா:

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு புரூலியா பகுதியில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், இங்கு தாதாக்கள் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது. மோடி தலைமையிலான ஆட்சியில் மட்டுமே வளர்ச்சியை காண முடியும். மேற்கு வங்காளத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவாகி வருகிறது. விரைவில் பா.ஜ.க. இங்கு ஆட்சியை பிடிக்கும் என கடுமையாக சாடியுள்ளார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் உங்களின் எண்ணம் நிச்சயம் பலிக்காது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.



    இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் வரவுள்ள தேர்தல்களை பற்றி மட்டுமே அமித்ஷா கவனத்தில் கொள்ள வேண்டும்.  பாஜகவினரின் பிரித்தாளும் கொள்கை மேற்கு வங்காளத்தில் எடுபடாது.

    பொதுவாக காலி பாத்திரங்கள் தான் அதிக சத்தம் போடும். புருலியா கூட்டத்தில் பேசிய அமித்ஷாவின் இன்றைய பேச்சும் அப்படித்தான் உள்ளது.
    குஜராத் மற்றும் மற்ற மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்து வருகிறோம் என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். #AmitShahinPurulia #MamataBanerjee
    Next Story
    ×