search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike theft"

    • வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
    • மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக பெரிய கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில மாதங்களாக வாகன ங்கள் திருடு போவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் வாகன திருட்டை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

    பைக்குகள் மற்றும் கார்கள் அடிக்கடி திருடப்படுகின்றன. இவற்றில் பைக்குள் மிக அதிக அளவில் திருடப்படுகிறது. புதுவை பூந்துறை ரோடு சிவாஜி நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 48). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். காலையில் வந்து பார்த்தபோது அவரது பைக் திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதே போல் நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் பாக்யராஜ் வயது 44 இவர் தனது பைக்கை பெரிய கடை பூ மார்க்கெட் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் நிறுத்தி இருந்த பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக பெரிய கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் பேரில் இரு போலீஸ் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் பைக் திருட்டால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் சாலையோரம் நின்றிருந்த பைக்குகளை நைசாக சாவி போட்டு திறந்து அதை திருடி மறைவான இடத்தில் பதுக்கினார்.
    • பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே கடவூர் பிரிவு சாலையில் ஒரு வாலிபர் சந்தேகத்தி ற்கிடமாக சுற்றித்திரிந்தார். சாலையோரம் நின்றிருந்த பைக்குகளை நைசாக சாவி போட்டு திறந்து அதை திருடி மறைவான இடத்தில் பதுக்கினார்.

    இதேபோல் 5க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதை கண்காணிப்பு காமிரா பதிவு மூலம் பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    மேலும் இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். பொது மக்கள் தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி மாவட்டம் எலமனம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என தெரிய வந்தது. மேலும் அவருடன் வந்த 2 வாலி பர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பைக் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவு திருடு போகிறது. வெளி யூர்களில் இருந்து வரும் நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • லாக்கை உடைத்து துணிகரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் தோட்டப்பா ளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது21). இவர் ரங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் மெக்கா னிக்காக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஸ்ரீதர் தனது பைக்கை வழக்கம்போல், ரங்காபுரத்தில் உள்ள கடைக்கு எதிரே நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர் கடையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் அங்கிரு ந்த கடை ஊழியர்களுடன் அருகிலுள்ள்ள பகுதிகளில் பைக்கை தேடினார்.

    அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் பைக்கின் லாக்கை உடைத்துவிட்டு தள்ளி சென்றதை பார்த்தனர். உடனடியாக 2 பேரையும் பிடித்து சத்துவாச்சாரி போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் ஓட்டேரி அடுத்த குளவிமேட்டைச் சேர்ந்த சிபிராஜ் (21) மற்றும் சத்துவாச்சாரியைச் சேர்ந்த யுவராஜ் (23) என்பதும் தெரியவந்தது.

    இதில் சிபிராஜ் மீது ஆந்திர மாநிலம் பாகாலா, காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சைக்கிள், பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மின் மோட்டார், வயர் மற்றும் பைக் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி அருகே சின்னமனூர்- சுக்காங்கால்பட்டி சாலையில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். அவரது மனைவி விஜயலட்சுமி (வயது63). இவர்கள் சொந்தமாக விவசாய நிலம் மற்றும் தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.

    கோவிந்தராஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் விஜயலட்சுமி மட்டும் பண்ணை வீட்டில் தனியாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சீலப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே சில்வார்பட்டி, நல்லகருப்பன் பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (48). இவரது வீட்டில் இருந்த மோட்டாரை தேவதானப்பட்டியை சேர்ந்த பிச்சைபாண்டி (46) என்பவர் திருடிச் சென்றார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிச்சை பாண்டியை கைது செய்தனர்.

    • தனது மோட்டார் சைக்கிளை மதுரை-தேனி ரோட்டில் உள்ள தேவாலயம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்ததை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    தேனி:

    தேனியை சேர்ந்தவர் முத்து (வயது45). தனது மோட்டார் சைக்கிளை மதுரை-தேனி ரோட்டில் உள்ள தேவாலயம் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழகுப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (46). இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அேத பகுதியை சேர்ந்த கோகுலபாண்டியன், குருநாதபாண்டியன் ஆகியோர் செல்போனை திருடிச் சென்றனர். அவர்களை பிடித்து கண்டமனூர் போலீசில் ஒப்பட ைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே படுக்கச் சென்றார்.

    பின்னர் நேற்று காலை வெளியே வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சரவணன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனையடுத்து போலீசார் பையூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் ஆரணி பாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பிரவீன் குமார் என்பதும், சரவணன் பைக்கை திருடியதும் தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
    • பைக் பறிமுதல் செய்யப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த ரெட்டிவலம் பகுதியில் நேற்று நெமிலி சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், நந்திவேடுதாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்(22) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி அதனை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கண்காணிப்பு கேமராவில் பதிவானது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 32). இவருக்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தங்களது வீட்டின் வெளியே வழக்கம் போல் நிறுத்தி வைத்து இருந்தார்.

    நேற்று மாலை அன்பரசு தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அப்போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது பட்ட பகலில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்வது பதிவாகியுள்ளது.

    இதனையடுத்து அன்பரசு நாட்டறம்ள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன சோதனையில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வில்வநாதபுரத்தை சேர்ந்த வர் மகேஷ்பாபு (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்தார். அதை யாரோ மர்ம கும்பல் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து மகேஷ் பாபு ராணிப்பேட்டை போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று ராணிப்பேட்டை போலீசார் ராணிப் பேட்டை பாலாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட, சோளிங்கர் அருகே உள்ள கொடைக்கல் காலனி பகுதியை சார்ந்த ஆகாஷ் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் மகேஷ் பாபுவின் மோட்டார் சைக்கிளை திரு டியதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • காட்பாடி ரெயில் நிலையத்தில் மடக்கி பிடித்தனர்
    • 4 வாகனங்கள் பறிமுதல்

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சோழாமூரை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 36).

    இவர் காட்பாடி திருவலம் கே வி குப்பம் லத்தேரி குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருடி வந்தார்.

    இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை வைரமுத்து காட்பாடி ரெயில் நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரெயில் நிலையத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த வைரமுத்துவை மடக்கி பிடித்தனர்.

    அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் பல்வேறு இடங்களில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    அவர் கொடுத்த தகவலின் அவரிடமிருந்த 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர். வைரமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறை ஊழியரின் பைக் திருடப்பட்டது.
    • காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), வனத்துறை ஊழியர் சம்பவத்தன்று இவர், தென்கரை மலை ப்பட்டி,
    வனத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் தனது மோ ட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சென்றார். மர்ம நபர்கள் மோ ட்டார் சைக்கி ளை திருடி சென்று விட்ட னர். அதில் அரிவாள், ரூ. 500 மற்றும் 2 டைரிகள், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள் இருந்தன.

    இது குறித்த புகாரின் பேரில் காடு பட்டி போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் சிக்கினார்
    • ெஜயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 41). இவர், நேற்று முன்தினம் மண்டலவாடி ஊராட்சிக்கு உட் பட்டவெள்ளைய கவுண்டனூர் பகுதியில் நடந்த எருதுவிடும்.

    திருவிழாவை பார்க்க தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட் டார். பூசாரிவட்டம் பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு விழாவை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்ப மோட்டார்சைக்கிளை எடுக்க வந்தார். ஆனால், அங்கு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் வெள்ளையகவுண்டனூர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்தபோது, மோட்டார் சைக்கிளை திருடியவர் அடையாளம் தெரிந்தது.

    அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத் தியபோது, திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுதாகர் (வயது 27) எனத் தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கனகராஜின் மோட்டார்சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர்.

    அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

    ×