என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BHOOMI PUJA"
- ரூ.1.70 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
- செயல் அலுவலர் சுதர்சன். முன்னிலை வகித்தார்.
சோழவந்தான்
சோழவந்தான் விரிவாக்க பகுதியான ஆர்.எம்.எஸ். காலனியில் தனிநபர் பங்களிப்பு தொகையுடன் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம் கட்டவும், 15-வது வார்டு பகுதியில் உள்ள வைகையாற்று பாதை பழைய மயான வளாகத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளுக்காகவும் பூமி பூஜை நடந்தது.
பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சுதர்சன். முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லதா கண்ணன், குட்கேர் என்வீர்மெண்ட் சிஸ்டம் நிறுவனத்தின் சி.இ.ஓ.முருகன், கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், குருசாமி, சத்தியபிரகாஷ், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமன், நிஷா கவுதமராஜா, ரேகா ராமசந்திரன், கணேசன், முத்துலட்சுமி சதீஸ், வள்ளிமயில், முனைவர் எம்.வி.எம். மருதுபாண்டியன் மற்றும் முனியாண்டி, பாண்டியன், மில்லர், கூலுசெந்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் பாலமுருகன், ஆர்.எம்.எஸ். குடியிருப்பு சங்க பொருப்பாளர் சந்திரசேகரன், சமூக ஆர்வலர்கள் மணிகண்டன், மண்டபம் கிரி, தாமோதரன், ஐ.டி. விங்க் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் கட்டடத்தை சீரமைக்க முன் வந்தனர்.
பல்லடம்:
பல்லடம் வடுகபாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 1956ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பெருமைக்குரிய இந்தப்பள்ளியின் கட்டடம் ஒன்று மிகுந்த சேதமடைந்து இருந்தது.
இதனை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் கட்டடத்தை சீரமைக்க முன் வந்தனர். இது குறித்து கடந்த மாதம் முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் அரசுப் பள்ளி கட்டடத்தை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றி தரைத்தளத்திற்கு டைல்ஸ் கற்கள் பதிப்பது, அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், திண்டு பாலு, சத்தியமூர்த்தி, ரமேஷ்குமார், மோகனகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர தி.மு.க.பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சசிரேகா ரமேஷ்குமார்,ஆசிரிய,ஆசிரியைகள்,பெற்றோர்கள்,மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்