search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beauty"

    • வாரம் ஒருமுறை வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யலாம்.
    • வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூரை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.

    நம் வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றுங்கள். அதுவே சிறந்த பெடிக்யூர் சிகிச்சையாக விளங்கும். சரி, இப்போது வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்: பால் 4 கப் பேக்கிங் சோடா 3 டேபிள் ஸ்பூன். முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

    பாதங்களையும் வைக்கக்கூடிய அளவில் ஒரு டப் எடுத்துக்கொள்ளவும். கணுக்கால் வரை மூழ்கும் அளவுக்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும். அதில் சிறிது குளியல் உப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் சில துளிகள் சேர்க்கலாம். பாதங்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும்.

    பின்பு ஒரு அகன்ற பாத்திரம் அல்லது பாதங்களை ஊற வைக்கும் வகையிலான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்த பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    இறுதியில் துணியால் பாதங்களை துடைத்துவிட்டு, பாதங்களுக்கு எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புக்கள், வறட்சி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பாதங்களின் அழகும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

    • தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
    • சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

    உடலின் தோல் பகுதி, உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கவசமாக இருப்பதுடன், உடலின் அழகை காட்டும் ஆடையாகவும் உள்ளது. சுத்தமாக சலவை செய்யப்பட்ட ஆடை போல் தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் தோலில் பரு, தழும்பு, புழுவெட்டு, பொடுகு என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இன்றைக்கு தோலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நவீன சிகிச்சைகள் இருப்பதால், அவற்றை எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும். பரவலாக காணப்படும் சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

    முகப்பரு

    பள்ளி, கல்லூரி மாணவிகள் பலரின் முக்கிய பிரச்சினையாக இருப்பது முகப்பரு. இந்த பருக்கள் முகத்தின் அழகை கெடுத்து அவர்களுக்கு கவலையை உருவாக்கி விடுகிறது. கடந்த காலங்களில் முகப்பரு பாதிப்பை போக்க சரியான மருந்து, மாத்திரைகள் இல்லை. சரியில்லாத மருத்துவ சிகிச்சையால் தழும்புகளும் ஏற்பட்டு விடும். கண்ட ஆலோசனைகளை எல்லாம் கேட்டு முகத்தில் கண்ட களிம்புகளையும் பூசி கடைசியில் முகத்தில் குழி, தழும்புகளை உண்டாக்கி முக அழகை நிரந்தரமாக கெடுத்துக் கொண்டு மன உளைச்சலால் அவதிப்படுவோர் நிறையவே உண்டு. இப்போது, முகப்பருக்களை நிரந்தரமாக போக்கும் ஐசோட்ரெடினாயின் மாத்திரை, மருந்துகள் வந்து விட்டன. இவை முகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் முகப்பருக்களை போக்கும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். 20 வார தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டால் முகப்பருக்களை முற்றிலும் கட்டுப்படுத்த இயலும்.

    பருத்தழும்பு

    பருக்கள் ஏற்பட்டு சரியான சிகிச்சை பெறாத போது பருத்தழும்புகள் முகத்தில் தங்கி விடும். பருத்தழும்புகளால் சீர் கெட்டு போன முகத்தை லேசர் மற்றும் இதர நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பொலிவுள்ள அழகான முகமாக மாற்ற முடியும்.

    முடி கொட்டுதல்

    அன்றாடம் கொத்து கொத்தாக முடி கொட்டுதல் பெண்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். இன்றைக்கு நீண்ட கூந்தல் இருப்பது அரிது. தற்கால உணவு, மன அழுத்தம், மருத்துவரின் ஆலோசனையின்றி கண்ட எண்ணெய்கள், குளியல் பூச்சுகளை பயன்படுத்துவது ஒரு காரணம். அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும். பொதுவாக, முடி தொடர்பாக எந்த பிரச்சினை இருந்தாலும் அதற்கான அனைத்து தீர்வுகளையும் ஒரு தோல் மருத்துவரால் மட்டுமே தீர்வு காண முடியும். தற்போது, அனைத்து வகையான முடி கொட்டுதல் பிரச்சினைக்கும் உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த மருந்துகள் வந்துள்ளன. தற்போது புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் வழுக்கையும் சரி செய்ய முடியும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். முடி சிகிச்சைக்கு என தனியாகப் படிப்போ, டாக்டரோ கிடையாது.

    வெண்படை நோய்

    புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் நாள்பட்ட வெண்படை நோய்க்கும் விரைவாகத் தீர்பு கான முடியும்.

    இளநரை

    முடியின் வேரில் இருந்து முடி வளர தொடங்கும்போது, அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலானின் என்ற நிறத்தை உருவாக்கும் பொருள் கலக்கப்படும். இதனால், முடி கருமையடைகிறது. இந்த மெலானின் சுரப்பி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இளநரை ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. எந்த காரணத்தால் இளநரை தோன்றுகிறது என்பதை சரியாக கண்டறிந்து தகுந்த மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொள்வதால் இளநரையை நீக்கி முடியை கருமையடைய செய்யலாம்.

    பரம்பரை வழுக்கை

    பரம்பரை வழுக்கைக்கு தீர்வு இல்லை என்பது பழைய நம்பிக்கை. இப்போது பக்க விளைவுகள் இல்லாத மிகச்சிறந்த மருந்து மாத்திரைகள் அமெரிக்க மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது இந்தியாவிலும் சுலபமாக கிடைக்கின்றன. இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பரம்பரை வழுக்கையை, பாதிப்பு ஏற்படும் முன் தடுத்து கொள்ளலாம். மேலும் இழந்த முடியையும் திரும்ப வளர வைக்கலாம். தற்போது இந்த மருந்துகளின் வருகையால் தலையில் வழுக்கையை மறைக்கும் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பொடுகு தொல்லை

    பொடுகு என்பது, பல வகை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். ஒருவருக்கு பொடுகு தொல்லை இருந்தால் அதற்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்கு தகுந்த மருந்துகளை தர வேண்டும். அதை விடுத்து, கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கை வைத்தியம் பார்ப்பது சரிவராது. தலையில் பொடுகு பிரச்சினையை அசட்டையாக விட்டு விட்டால் முடியின் ஆரோக்கியம் கெட்டு முடி கொட்டுவதையும் நிறுத்த முடியாது.

    புழு வெட்டு

    தலையில் ஆங்காங்கே செதுக்கியது போல் சொட்டை விழுவது புழுவெட்டு. தலையில் திடீரென்று வட்ட வடிவில் முடி உதிர்ந்து முடி இல்லாமல் போகும் பாதிப்பை புழுவெட்டு என்கிறோம். இது தலையில் மட்டும் அல்லாமல் புருவம், தாடி, மீசை போன்ற இடங்களிலும் வரலாம். சிலருக்கு சில இடங்களிலும், சிலருக்கு ஒட்டுமொத்தமாக தலைப்பகுதி முழுவதும் கூட பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு புழுவோ, பூச்சியோ காரணம் இல்லை. நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களின் தவறான செயல்பாடே காரணம். வெங்காயம் தேய்ப்பது, கண்ட எண்ணெய்களை தேய்ப்பதால் புழுவெட்டு நீங்காது. தோல் மருத்துவர் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். இதற்கு சமீபத்தில் மிகச் சிறந்த புது மருந்துகள் வந்துள்ளன.

    சொரியாசிஸ்

    சொரியாசிஸ் நோய்க்கும் தற்போது மிக சிறப்பான மருந்துகள் வந்துவிட்டன. இவற்றால் மிகக்குறுகிய காலத்தில் சிறந்த பலன் கிடைக்கும்.

    படர்தாமரை

    நவீன மருந்து மாத்திரைகள் மூலம் நாள்பட்ட படர்தாமரையும் நிரந்தரமாக சரிசெய்ய முடியும்.

    ஆண் முகத்தில் முடி இல்லாமை

    ஆண்களுக்கு முகத்தில் நல்ல ரோம வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. தற்போது, தாடி வளர்த்து விதவிதமாக ட்ரிம் செய்வது பேஷனாகவும் இருக்கிறது. பொதுவாக, ஆண்கள் முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத் தன்மை மற்றும் ஹார்மோன் குறைபாடு காரணமாகும். இதற்கு முறைப்படி காரணத்தை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் நன்கு முடி வளரச் செய்யலாம்.

    பெண்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி

    சில பெண்களுக்கு முகத் தாடை, உதட்டின் மேல் பகுதி போன்ற இடங்களில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கும். இந்த முடிகளை வேக்சிங் அல்லது திரெடிங் முறையில் அகற்றினால் அது இன்னும் அதிகமாக வளரும். தற்போது, இந்த தேவையற்ற முடிகளை அகற்ற உலகத்தரம் வாய்ந்த டையோடு லேசர், லாங் பல்ஸ் என்டியாக் லேசர் மற்றும் ட்ரிபிள் வேவ்லென்த் லேசர் கருவிகள் இங்கு இருக்கின்றன. இவற்றின் மூலம் மிக எளிதாக நிரந்தரமாக முகத்தில் உள்ள தேவையற்ற முடி வளர்ச்சியை நீக்க முடியும். இந்த லேசர் கருவிகளை முறையாக தெரிந்த தோல் நோய் மருத்துவர் மட்டுமே பயன்படுத்த முடியும். திருநங்கைகளுக்கு இந்த சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதம். எங்கள் மருத்துவமனையில் இந்த கருவிகள் மூலம் நிறைய பேர் பயன்பெற்று மகிழ்வுடன் செல்கின்றனர்.

    பச்சை அகற்றுதல்

    சிறுவயதில் பேஷன் என்ற பெயரில் உடம்பில் பச்சை குத்துவது அதிகரித்து வருகிறது. உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர்கள் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட அரசு சீருடை பணிகளில் சேர முடியாது. தொடர்பில்லாத பெயர்களை பச்சை குத்தி வைத்திருக்கும் சிலருக்கு இது திருமண வாழ்க்கையில் பிளவைக் கூட ஏற்படுத்தி விடுகிறது. தற்போது, எங்கள் மருத்துவமனையில் உள்ள பைகோ செகண்ட் க்யூ ஸ்விட்ச்டு லேசர் மூலம் இந்த பச்சை அடையாளங்களை துல்லியமாக தோலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நீக்கி விடுகிறோம்.

    இதர பாதிப்புகள்

    மேற்சொன்ன தோல் பிரச்சினைகள் மட்டுமின்றி தோல் அலர்ஜி, வெண்படை, குஷ்டம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் உள்ளன. எந்த தோல் வியாதியையும் எளிதாக இவற்றால் சரி செய்ய முடியும். எனவே, உடலின் அழகை வெளிக்காட்டும் தோல் பகுதியை பொலிவாக வைத்து தன்னம்பிக்கையுடன் வாழ வழி செய்வோம்.

    குறிப்பு: பெண்களுக்கு பெண்களாலேயே பரிசோதனை செய்யப்படும்.

    தொடர்புக்கு, ஆதித்தன் தோல் முடி லேசர் மருத்துவமனை, ஆண்டாள்புரம், மதுரை.

    செல்போன்-81110 00000,

    73731 41111, 73731 42222

    • குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும்.
    • பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிகால் வெடிப்பு தான்.

    நம் பாதங்களில் இருக்கும் பகுதிகளில் குதிகால் பகுதி தான் அதிக அழுத்தத்தை தாங்குகிறது. இதனால் தான் அதிகமாக நடப்பது, நின்று கொண்டே இருப்பது போன்ற விஷயங்களால் நிறைய பேர் பாத வெடிப்பை சந்திக்கின்றனர். இந்த குதிகால் வெடிப்பு எந்த காரணத்தினால் உண்டாகிறது. மேலும் அதற்கு எப்படியெல்லாம் சிகிச்சை செய்யலாம் என அறிந்து கொள்வோம்.

    இதனால் பாதங்களில் பிளவுகள் உண்டாகி வலி ஏற்படுகிறது. இந்த குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும். இயற்கையாகவே பாதங்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் போது குதிகால் வெடிப்பு மறைகிறது. பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிகால் வெடிப்பு தான். குதிகால் வெடிப்பு காலின் அழகைக் கெடுப்பதோடு பல சமயங்களில் நமக்கு வலியையும் ஏற்படுத்துகிறது. இது அப்படியே வளர்ச்சி அடைந்து செல்லுலாய்டிஸை உண்டாக்குகிறது. குதிகாலில் உள்ள சருமம் வறண்டு போகும் போது அதில் வெடிப்புகள் உருவாகின்றன.

    அதே மாதிரி நாம் நடக்கும் போது குதிகால் பகுதி அதிக அழுத்தத்தை சந்திக்கிறது. இதனால் அதிக அழுத்தம் உண்டாகி அந்த சருமம் தடினமாகி குதிகால் வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிளவுகள் ஆழமாக போகும் போது தான் நமக்கு வலியை ஏற்படுத்துகிறது குதிகால் வெடிப்பை கால்சஸ் என்ற பெயரில் அழைக்கின்றனர். குதிகால் பகுதியை சுற்றியுள்ள சருமம் கடினமாகி வறண்டு போய் வெடிப்பானது உண்டாகிறது.

    நீங்கள் தொடர்ச்சியாக நடந்து குதிகாலுக்கு அழுத்தத்தை கொடுக்கும் போது நிலைமை இன்னும் மோசமாகலாம்.நீண்ட நேரம் நிற்பது. வெறுங்காலில் நீண்ட தூரம் நடப்பது. சூடான நீரில் குளிப்பது. காலநிலை மாற்றம். கடினமான சோப்புகளால் தோல் வறண்டு போதல். குளிர்ச்சியான காலநிலையால் வறண்ட சருமம் தோன்றுதல். இவற்றால் பாத வெடிப்புகள் உருவாக காரணமாக கூறப்படுகிறது.

    • வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
    • அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

    தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும். பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். அதற்குள் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும்.

    உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும். வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாக கழுவினால் வெடிப்பு வரும் வாய்ப்பு குறைவு. கற்றாழை, தேங்காய் எண்ணெய் தடவலாம். ஆனால் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும். வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

    கால்களில் நகங்களை வெட்டும்போது முழுமையாக வெட்டிவிடாமல் லேசாக நகம் இருக்குமாறு வெட்ட வேண்டும். முழுமையாக வெட்டினால், சதைப் பகுதிக்குள் நகம் வளர்ந்து வலி உண்டாகும். அதேபோல், நகங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி எப்போதும் உலர்ந்த தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத்தன்மையோடு இருந்தால் தொற்றுகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

    • பியூமிஸ் கல்லைப் பாதங்களின் மீது மென்மையாக வட்ட வடிவில் சுழற்றி தேய்க்கவும்.
    • ஒரே கல்லை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

    அழகைப் பராமரிப்பது என்பது முகத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், உச்சி முதல் பாதம் வரை கவனம் செலுத்துவதாகும். முக அழகைப் பாதுகாப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் பலரும் பாதங்களைப் பற்றி யோசிப்பது கிடையாது. இதன் காரணமாக பாதங்களில் வெடிப்புகள் உண்டாகிறது.

    இது அழகைக் கெடுப்பதோடு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. கால்களுக்குப் பொருந்தாத காலணிகள், அளவுக்கதிகமான உப்புத் தண்ணீரில் பாதங்கள் படுவது, சத்துக்குறைவு போன்ற காரணங்களால் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. இத்தகைய வெடிப்புகள், இறந்த செல்கள் படிதல் போன்ற பிரச்சினைகளை நீக்கி பாதங்களை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிப்பதற்கு 'பியூமிஸ் கல்' உதவுகிறது. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

    'பியூமிஸ் கல்' பாதங்களின் உலர்ந்த சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதை நேரடியாக சருமத்தின் மீது பயன்படுத்தக்கூடாது. உலர்ந்த கல்லை பாதங்களின் மீது தேய்ப்பதற்கு முன்பு, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் சருமத்தில் சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    பியூமிஸ் கல்லைப் பாதங்களின் மீது மென்மையாக வட்ட வடிவில் சுழற்றி தேய்க்கவும். இதனால் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். ஒவ்வொரு முறை பியூமிஸ் கல்லைப் பயன்படுத்திய பிறகும், அதில் ஒட்டியிருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். ஒருவர் பயன்படுத்திய கல்லை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. ஒரே கல்லை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

    பியூமிஸ் கல்லைப் பயன்படுத்திய பிறகு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி பாதங்களை மசாஜ் செய்துகொள்ளலாம். மாய்ஸ்சுரைசருக்குப் பதிலாக தேங் காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களில் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்து விடவும்.

    பிறகு, சுத்தமான துண்டைப் பயன்படுத்தித் துடைத்து, உலரவிட்டு காலுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். இவ்வாறு வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால், கால்கள் கருமையாவதையும், குதிகால் வெடிப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம். பாதங்களில் காயங்கள், புண் ஏதேனும் இருந்தால் பியூமிஸ் கல்லை பயன்படுத்தக்கூடாது.

    இன்றைய நாளில் பெண்கள் விரும்பி அணியும் பலவித பொருட்களிலும் பூக்கள் இடம் பெறுகின்றன. பெண்கள் மனதை கவர்ந்த பூக்கள் என்பது காலில் அணியும் ஸ்நீக்கர் ஷு-க்களிலும் வந்துள்ளது.
    இளம் வயது பெண்கள் விரும்பி அணியும் ஸ்நீக்கர்ஸ் என்ற ஷுக்கள் இப்போது வண்ணமயமான மலர்கள் பதியப்பட்டவாறு வருகின்றன. கேஸ்வலாக அன்றாடம் அணிய ஏற்ற புத்தம் புதிய வடிவமைப்பில் பூ வேலைப்பாடு ஸ்நீக்கர்ஸ் வந்துள்ளன. அணிகின்ற ஆடைகளுக்கு ஏற்றவாறு விதவிதமான பல வண்ண பூக்கள் பதியப்பட்ட ஸ்நீக்கர்ஸ் என்பது கண்கவர் வடிவில் அனைத்து நிகழ்வுகளுக்கும் அணிய ஏற்ற வகையில் உள்ளன.

    இந்த பூ வேலைப்பாடு ஸ்நீக்கர் என்பது லோ-டாப் மற்றும் ஹை-டாப் என்ற இருவகை பிரிவுகளிலும் கிடைக்கின்றன. அதுபோல் லேஸ் வைக்கப்பட்டும், லேஸ் இல்லாத கட்-ஷுவை போன்றும் புதிய புளோரல் ஸ்நீக்கர்ஸ் வந்துள்ளது.

    பூ வேலைப்பாடு என்பது எம்பிராய்டு செய்யப்பட்டும், வண்ண பூச்சு செய்யப்பட்டவாறும் கிடைக்கின்றன. இதில் பூக்கள் என்பது பளிச்சென தெரிகின்றவாறு அடர்த்தியான வண்ணங்களிலும், மென்மையான வண்ணங்களிலும் பலதரப்பட்ட வகையில் கிடைக்கின்றன. இன்றைய நாளில் பெண்கள் விரும்பி அணியும் பலவித பொருட்களிலும் பூக்கள் இடம் பெறுகின்றன. பெண்கள் மனதை கவர்ந்த பூக்கள் என்பது காலில் அணியும் ஸ்நீக்கர் ஷு-க்களிலும் வந்துள்ளது.

    உறுதியான துணிகளின் மீது எம்பிராய்டரி மற்றும் வண்ண பெயிண்ட் செய்யப்பட்ட இந்த ஸ்நீக்கர் என்பது வெகு நாட்கள் ஆனாலும் அதன் புதுமையும், பொலிவும் மாறாது இருக்கும்படி உறுதியான தன்மை கொண்டதாக உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

    லெதர் பூ வேலைப்பாடு ஸ்நீக்கர்ஸ்

    பூ வேலைப்பாடு செய்யப்பட்ட ஸ்நீக்கர்ஸ் என்பது உறுதியான லெதர் மூலம் உருவாகியுள்ளன. அதாவது டிரிப்ட்வுட் லெதர், பாப்ராய்ஸ் லெதர், டெனிம் லெதர், பன்ச் கோரல் லெதர் போன்றவை மூலம் உறுதியான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் டெனிம் லெதர் என்றால் அதனை சுலபமாக துவைத்து கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

    எடை குறைந்த ஸ்நீக்கர்ஸ்

    அதிக எடையின்றி இலகுவாக அணிய ஏற்றது என்பதால் பெண்களின் விருப்பமான ஸ்நீக்கர்ஸ் ஆக உள்ளது. மேலும் அணிவதற்கு சுலபமான ஷு என்பதாலும் உடனுக்குடன் கழட்டி அணிய ஏற்றது என்பதாலும் கல்லுரி மற்றும் அலுவலக பெண்களின் விருப்ப தேர்வாக உள்ளது.

    வண்ணமயமான மலர்கள் மலர்ந்த ஸ்நீக்கர்ஸ்

    வெள்ளை நிற பின்னணியில் வண்ண மலர்கள் தனிப்பட்டு தெரியும் வகையில் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்நீக்கர்ஸ் உள்ளன. அதுபோல் பிங்க் நிற பின்னணியில் வெள்ளை நிற மலர்களம், கருப்பு நிற பின்னணியில் பல வண்ண மலர்கள் அதாவது பச்சை, மஞ்சள், சிகப்பு நிற மலர்கள் பார்க்க பளிச்சிடும் வகையில் உள்ளன. பெரும்பாலும் பெண்கள் மென்மையான வண்ண சாயல் கொண்ட பூ வேலைப்பாடு ஸ்நீக்கர்ஸ்-யை தான் விரும்பி அணிகின்றனர். ஏனெனில் எந்த விதமான வண்ண ஆடையாய் இருப்பினும் மென்மை வண்ண ஸ்நீக்கர் பொருத்தமான ஷு-வாக இருக்கும்.

    பிரிண்ட் செய்யப்ப்ட ஸ்நீக்கர்ஸ்

    லெதர் மற்றும் துணியின் மீது அந்த பகுதி மக்கள் விரும்பும் மலர்கள் வளைவுகளாய் அழகுற பிரிண்ட் செய்யப்பட்டு வருகின்றன. பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்நீக்கர் என்பது உயிரோட்டமான பூ அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. மேலும் பூவின் அழகு அற்புதமாக வெளிப்படும் பின்னணி வண்ணசாயல் என்பது நீண்ட நாள் மறையாமல் புது பொலிவுடன் காட்சி தருகின்றன. பிரிண்ட் செய்யப்படும் போதும் உலகளாவிய மலர் வடிவம் அனைத்தும் சுலபமாக பிரிண்ட் செய்யப்படுவதால் நவீன யுவதியர் விரும்பும் வடிவில் உள்ளன.

    வானவில் கருத்துறு ஸ்நீக்கர்ஸ்

    வானவில்லின் ஏழு வண்ணங்களும் மலர்களாய், வண்ண அச்சுகளாய் உள்ள ஸ்நீக்கர்ஸ் வருகின்றன. இது கேஸ்வல்-ஆக அணிய எற்றது என்பதால் பார்ட்டி மற்றும் பயணங்களின் போது அணிந்து மகிழலாம். நாம் அணியும் பல வண்ண சாயல் ஆடைகளுக்கு ஏற்ற இணைப்பாக இந்த வானவில் கருத்துறு ஸ்நீக்கர்ஸ் திகழ்கிறது. பெண்களின் மனதை கவரும் வகையில் புதுமை வடிவமைப்புடன் வந்துள்ள புளோரல் ஸ்நீக்கர்ஸ் என்பது எந்தவிதமான ஆடைக்கும் ஏற்ற இணை. அதாவது பெண்களின் மாடர்ன் டிரஸ் மற்றும் ஜீன்ஸ் போன்றவையுடன் பலோலோ, டியூனிக் போன்ற ஆடைகளுக்கும் ஏற்ற வகையாக உள்ளது. பூ வேலைப்பாடு செய்யப்பட்ட ஸ்நீக்கர்ஸ் அணிவதே தற்போதைய டிரெண்ட்.
    வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க உதவும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    வழுக்கைத் தேங்காயை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழிருந்து மேல்நோக்கிப் பூசி, உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம்
    செய்ய வேண்டும். இப்படித் தினமும் செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும், கரும்புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல்
    போய்விடும்.

    வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால் கூட இதுபோன்ற நிலை ஏற்படும். தேங்காய்ப் பால் இரண்டு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசைபோலாக்க வேண்டும். இந்தப் பசையை முகத்தில் பூசிக் கொண்டு உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்தால் முகம் பிரகாசமாகும்.

    ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்துப் பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும்.

    தேன் ஒரு டீஸ்பூன், தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூச, கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.

    பால் பவுடர் - ஒரு டீஸ்பூன்,
    தேன் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்,
    பாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன்

    இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். முகத்தை நன்றாகக் கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து, பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

    வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.
    பால் அழகான உடல் சருமத்திற்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது. பாலை கொண்டு இயற்கை முறையில் பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கோடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கக்கூடியது சருமம். சூரிய ஒளிக்கதிர்கள் சருமத்தில் விழும்போது, நிறங்கள் மாறுகின்றன. இதனை சன்- டான் என குறிப்பிடுவர். இதற்கான வீட்டிலேயே செய்ய கூடிய இயற்கை மருத்து குணங்கள் கொண்ட முறைகளை எளிதாக தயார் செய்யலாம். குறிப்பாக பச்சை பால், அழகான உடல் சருமத்திற்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது.

    * காய்ச்சாத பால், சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது. வெயில் பட்ட மேனிக்கு, கரு நிறத்தை போக்கக்கூடியது. காய்ச்சாத பால், தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து உபயோகித்து வந்தால், வீட்டிலேயே டான் பிரச்சைகளை தீர்க்கலாம்

    ஆண்டி-டான் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி?

    பாதாம் - 6, பேரிச்சம்பழம் - 6 இவற்றை காய்ச்சாத பாலில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு, பாலில் உள்ள பொருட்களை அரைக்க வேண்டும். முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்துவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும். முகத்தை தண்ணீரில் நனைத்தப்படி, 2-3 நிமிடங்களுக்கு அதே கலவையை கொண்டு தேய்க்க வேண்டும். சுத்தமான நீரினால் முகம், கழுத்து பகுதிகளை கழுவ வேண்டும்
     
    * பச்சை பால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க கூடியது. அபத்தான யூவி கதிர்களில் இருந்து முகத்தை காக்க கூடியது. அதுமட்டுமின்றி மிருதுவான சருமத்திற்கு காய்ச்சாத பால் பயன்படுகிறது.

    காய்ச்சாத பால் ஃபேஸ் க்ளென்சிங் மாஸ்க்

    காய்ச்சாத பாலுடன் பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் விடவும். 4-5 நிமிடங்களுக்கு தேய்த்த பின் முகத்தை கழுவ வேண்டும். 

    இந்த இயற்கை முறைகள் மூலம், பளிச்சிடும், மென்மையான சருமம் பெறலாம்.
    ரெட் ஒயின் பேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தால், நிறைய செலவாகும். ஆனால் இந்த பேஷியலை வீட்டிலேயே எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம்.
    சிவப்பு ஒயினை வைத்து பேஷியல் செய்தால் சருமம் நன்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும். சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கிவிடுகிறது. மேலும் இந்த ஃபேஷியல் சருமத்தை இறுக்கமடையச் செய்கின்றன என்று அழகு நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஒயினில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு ஒயினும் சருமத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். இத்தகைய ஃபேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தால், நிறைய செலவாகும். சொல்லப்போனால், இதை வைத்து தான் முகத்திற்கு பேஷியல் செய்வார்கள். ஆனால் இப்போது எப்படி வீட்டிலேயே அத்தகைய ஒயின் ஃபேஷியல் செய்வதென்று பார்க்கலாம்.

    கிளென்சிங்: ஈரமான துணியால் முகத்தை துடைத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கரண்டி ரெட் ஒயினுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து வைத்து கொள்ளுங்கள். அதை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும். நன்கு மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

    ஷகரப்: ரெட் ஒயினை, காபி, அரிசி போன்ற இயற்கையான ஷகரப்புடன் கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். உங்கள் உலர்ந்த சருமத்தையும், டெட் செல்களையும் நீக்கி விடும்.

    மசாஜ்: கற்றாழை அல்லது பன்னீர், இவற்றுடன் ஒரு தேக்கரண்டி ரெட் ஒயின் கலந்து முகத்தில் நன்கு மசாஜ் செய்ய உங்கள் முகம் அட்டகாசமாக ஜொலிக்கும்.

    * இனிப்பான ரெட் ஒயின் 3 டேபிள் ஸ்பூன், 1/2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை ஊற்றி, கலந்து முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். இந்த ஃபேஷியலை வறண்ட சருமம் உள்ளவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

    * 3 டேபிள் ஸ்ழுன் ரெட் ஒயினுடன், தயிர் மற்றும் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீங்கி, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கும். இந்த ஃபேஷியல் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது.
    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சருமம் வறண்டு போகும். கோடையின் போது நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து அறிந்து கொள்ளலாம்.
    ‘கோடையில் சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் சூரியக் கதிர்களில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிக்கும். இதனால் எரிச்சல், வெள்ளைத் தழும்பு, வெடிப்பு ஏற்படும். சருமம் கருப்பாகவும் மாறும். மங்கு பிரச்சனையும் ஏற்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சருமம் வறண்டு போகும்.

    அதை தடுக்க இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொள்ளலாம். கை மற்றும் கால்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பருத்தியாலான கிளவுஸ் மற்றும் சாக்ஸ் அணியலாம். ஹெல்மேட் அணிவதால் அது தலைமுடி வறண்டு போகாமல் பாதுகாக்கும். அதே சமயம் ஹெல்மெட் அணியும் போது தலையில் ஒரு பருத்தி துணியை போட்டு அதற்கு மேல் ஹெல்மெட்டை அணியலாம்.



    பெண்கள் மத்தியில் தலைமுடிக்கு டை பூசுவது அதிகரித்துவிட்டது. அவ்வாறு பூசும் போது ரசாயன டைகளை தவிர்த்து விட்டு மருதாணி மற்றும் ஆர்கானிக் டைகளை பயன்படுத்தலாம். உடைகளில், உடலை இறுக்கிப் பிடிக்காத மற்றும் உறுத்தாத பருத்தி ஆடைகள் அணியலாம். பனியன் துணியாலான டிஷர்ட் இந்த காலத்தின் சிறந்த உடை. வெளியே செல்லும் போது பிங்க், நீலம், வெளிர் மஞ்சள் போன்ற மெல்லிய நிற உடைகளை அணியலாம். கோடைக் காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக அணியும் உடை உள்ளாடைகள் தான்.

    சரியான முறையில் தேர்வு செய்து அணியாவிட்டால் சரும பிரச்னைகள் வரும். கருப்பு, சிவப்பு மற்றும் அடர்த்தியான நிறங்கள் கொண்ட உள்ளாடைகளை அணியக்கூடாது. வெள்ளை மற்றும் சரும நிற பருத்தி உள்ளாடைகளை அணிவதே நல்லது. குறிப்பாக வியர்வை அதிகமாக வெளியாகும் போது மங்கு, அரிப்பு போன்ற பிரச்சனை ஏற்படும். எலாஸ்டிக் மற்றும் வயரிங் கொண்ட உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். உள்ளாடைகளையும் மாற்றுங்கள்’’.     

    தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது.
    வேப்ப மரங்கள், மருத்துவ குணங்கள் கொண்டவை. "வேப்ப எண்ணெய் பொடுகுப் பிரச்சனையை குணப்படுத்தும். அந்தக் காலத்தில், வேப்பங் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தினர். வேப்ப மரத்தின் இலைகள், பழங்கள், ஆகியவை காய்ச்சல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தலாம். மேலும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. ஆயூர்வேதத்தின்படி, வேப்பம், சீகைக்காய், நெல்லி, ஆகியவை தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க கூடியவை.
     
    தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபயோகித்து தலை அலசுவதினால், சுத்தம் ஆகும். முடி வளர்ச்சிக்கும் வேம்பு பயன்படும்.

    வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இன்னும் ஆரோக்கியமானது. வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.

    மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையல் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொடுகு, தலையில் இருக்கும் பிசுப்பிசுப்பான எண்ணெய் தேகத்தில் இருக்கும். பொடுகு பிரச்சனைகளால் அரிப்பு ஏற்படும்.

    வேப்ப எண்ணெய் உபயோகித்து, பொடுகுப் பிரச்சனையை போக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், சில எலுமிச்சை சாறு துளிகள் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இன்னொரு முறையாக, வேப்ப பொடி மற்றும் இலை சேர்த்த கலவையை பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கும். 
    எண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவர்கள் நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தியை மட்டும் பின்பற்றினால் போதுமானது.
    எண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவரா? நீங்கள்..என்ன கிரீம் வாங்கிப் போட்டாலும் அந்த பிரச்னையை சரிசெய்யவே முடியவில்லையா? கவலையை விடுங்க.. சின்ன சின்ன உத்தியை மட்டும் பின்பற்றினால் போதும். சூப்பர் ஃபேஸ் கிடைக்கும்.

    பொதுவாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மேக்கப் போட்டாலும், சிறிது நேரத்தில், முகத்தில் எண்ணெய் மினுமினுக்கத் தொடங்கி, முகம் களையிழந்து விடும். அதனால், எண்ணெய் சருமம் உடையவர்கள், முகத்துக்கு மேக்கப் போடும் முன் ஐஸ்கட்டியை ஒரு காட்டன் துண்டு அல்லது துணியில் சுற்றி முகத்தில் பரவலாக ஒற்றி எடுங்கள்.

    பிறகு, உலர்ந்த துண்டை பயன்படுத்தி, முகத்தை மிக மென்மையாகத் துடைத்து, முகம் உலர்ந்தபின், உங்களது வழக்கமான மேக்கப்பைத் தொடங்குங்கள். இவ்வாறு செய்வதால், மேக்கப் நீண்டநேரம் கலையாமலும் இருக்கும். எண்ணெய் பிசுபிசுப்பும் இருக்காது. முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    சருமத்தில் உள்ள நுண்ணிய துளைகள் இறுக்கமாக்கப்படும். கண்கள் பூத்துப்போனது போல் இல்லாமல் பிரகாசமாகத் தெரியும். முகத்தில் உள்ள மெல்லிய சுருக்கங்கள் மறையும். முகத்தில் ரத்தஓட்டம் அதிகரிப்பதால் பொலிவான சருமத்தை பெறலாம். சாத்துக்குடி சாறு அல்லது எலுமிச்சைசாறு கலந்த நீர் ஏதாவது ஒன்றை ஐஸ்கட்டி டிரேயில் ஊற்றி, கட்டி ஆனதும் முகத்துக்குப் பயன்படுத்தலாம்.

    ×