search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barge"

    • 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டு படகுகள் உள்ளது.
    • நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    பேராவூரணி:

    வங்கக்கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர்சிவகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

    இதனை தொடர்ந்து 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    துறைமு கத்தில் பாதுகா ப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளன.

    மல்லிபட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளன.

    கொள்ளுக்காடு புதுப்பட்டினம், மல்லிப ட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மந்திரிபட்டினம், செம்பியன் மாதேவிபட்டினம், அண்ணாநகர் புது தெரு, கணேசபுரம் உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டுப் படகுகள் உள்ளது.

    விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    மற்ற நாட்களில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடித்து தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று சனிக்கிழமை 3 -வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.
    • அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையை கண்டித்து, நாகையில் மீனவர்கள் தபால் நிலையம் முன்பு கொட்டும் மழையில் குடை பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.

    அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • படகின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
    • 2-ம் நாளான இன்றும் கடலில் மூழ்கிய கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் பகுதியில் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதனால் படகின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். புதுச்சேரி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த இந்த படகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மரக்காணம் கூனிமேடு குப்பத்திற்கு கொண்டு வந்து கடற்கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இந்த படகு கடலில் மூழ்கியது அங்குள்ள மீனவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் துறை ரோந்து பணி, மரக்கணம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து 2-ம் நாளான இன்றும் கடலில் மூழ்கிய கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் துறைமுகம் இல்லாத காரணமே படகு கடலில் மூழ்கியது. அதனால் இந்த பகுதியில் துறைமுகம் கட்டித் தரவும் மற்றும் போதுமான வசதி ஏற்படுத்தியும் தரவேண்டுமென இங்குள்ள மீனவ பொது மக்கள் சாலைமறியல் செய்யபோவதாக தெரிவித்தனர். இன்று காலை முதலே சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனை அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீனவ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • நேற்று முதல் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்தினை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கதவணை நீர்ப்பரப்பில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே, இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையிலான விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதனை இரு மாவட்டங்களையும் சேர்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்த நிலையில், அண்மையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் பூலாம்பட்டி கதவனை பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பயணிகளின் பாதுகாப்பினை கருதி நேற்று முதல் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்தினை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மறுகரைக்கு செல்ல சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கோனேரிப்பட்டி கதவனை பாலம் வழியாக பயணிகள் ஆற்றினை கடந்து வருகின்றனர். வெள்ள அபாயம் குறையும் வரை தொடர்ந்து விசைப்படகு போக்குவரத்து நடைபெறாது எனவும், அதுவரை பயணிகள் பரிசல் மற்றும் இதர பயன்பாட்டின் மூலம் ஆற்றினை கடக்க முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • மீன்பிடி விசைப்படகுகள் கடந்த 61 நாட்கள் தடைகாலம் முடிந்து தொடர்ச்சியாக மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
    • அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிபட்டினம்,கள்ளி வயல்தோட்டம், சேதுபா வாசத்திரம் பகுதியில் 157 விசைப்ப டகுகள் உள்ளது. மீன்பிடி விசைப்படகுகள் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து தொடர்ச்சியாக மீன்பிடித் தொழில் செய்து வந்த நிலையில் தற்போது அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மல்லிப்ப ட்டினம் மீன்பிடிதுறை முகம் மற்றும் சேதுபாச த்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் தஞ்சாவூர்மீன்வ ளம் மற்றும் மீனவர்ந லத்துறை உதவிஇயக்கு னர்சிவக்குமார் தலைமை யில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வா ளர்ஆனந்த், கங்கேஸ்வரி, சார் ஆய்வாளர் காமராஜ், மற்றும் கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் நவநீதன், மீன்வள மேற்பார்வையாளர் சுரேஷ், கடல் மீன் பிடி சட்ட அமலாக்க பிரிவு ராஜா மற்றும் அலுவலர்களால் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் மற்றும் சேதுபாவாசத்திரம் விசைப்படகு சங்கநிர்வாகி களுடன் கூட்டம் நடத்தப்பட்டு அரசால் தடை செய்யப்பட்டமீன்பிடி வலைகளை பயன்படு த்தக் கூடாது எனவும் மீறி செயல்பட்டால்தமிழ்நாடு கடல் மீன்பிடி சட்ட விதிகளின்படி கடுமை யான நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ×