search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "search mission"

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் ஜெகநாதன் (வயது 32). இவர் நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

      இழுத்துச் செல்லப்பட்டார்

      இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.

      அப்போது ஜெகநாதன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அவரை ேஜடர்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் பரிசல், மீன்பிடி படகு மூலமாக தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தண்ணீரில் மாயமாகி இன்றுடன் 7 நாட்கள் ஆகிறது.

      இன்று 7-வது நாளாக தொடருகிறது

      இன்றும் 7-வது நாளாக தொடர்ந்து காலை முதல் காவிரி ஆற்றில் மீண்டும் ஜெகநாதனை தேடி வருகின்றனர்.

      7 நாட்கள் ஆகியும் ஜெகநாதனை கண்டுபிடிக்க முடியாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ஜெகநாதன் என்ன ஆனார்? என்பது குறித்து எந்த தடயங்களும் கிடைக்காததால் போலீசார் செய்வதறியாது உள்ளனர்.

      • தங்கசாமி படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.
      • மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.

      புதுச்சேரி:

      காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ந்தேதி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த தங்க சாமி என்பவர், படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.

      சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் பிற மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கூடுதல் படகுகளில் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.

      • கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.
      • தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

      கள்ளக்குறிச்சி: 

      கள்ளக்குறிச்சி அருகே மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூரில் உள்ள வாய்க்காலில் கை, கால்களை கழுவுவதற்காக திருவண்ணாமலை மா வட்டம் இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த சின்னப்பராஜ் (வயது 22) என்பவர் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சின்னப்பராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

      இதனிடையே இரவு வெகு நேரம் ஆனதால் சின்னப்பராஜை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்த ப்பட்டது. இதையடுத்து 2-வது நாளாக நேற்று மீண்டும் தேடும் பணியில் மீட்டனர். இந்த நிலையில் வடசிறுவள்ளூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தட்டாரணை பகுதியில் மாலை 5 மணி அளவில் சின்னப்பராஜ் ஒரு மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் 25 மணி நேரத்துக்கு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      • படகின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
      • 2-ம் நாளான இன்றும் கடலில் மூழ்கிய கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

      விழுப்புரம்:

      மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் பகுதியில் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதனால் படகின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். புதுச்சேரி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த இந்த படகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மரக்காணம் கூனிமேடு குப்பத்திற்கு கொண்டு வந்து கடற்கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இந்த படகு கடலில் மூழ்கியது அங்குள்ள மீனவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

      இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் துறை ரோந்து பணி, மரக்கணம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து 2-ம் நாளான இன்றும் கடலில் மூழ்கிய கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் துறைமுகம் இல்லாத காரணமே படகு கடலில் மூழ்கியது. அதனால் இந்த பகுதியில் துறைமுகம் கட்டித் தரவும் மற்றும் போதுமான வசதி ஏற்படுத்தியும் தரவேண்டுமென இங்குள்ள மீனவ பொது மக்கள் சாலைமறியல் செய்யபோவதாக தெரிவித்தனர். இன்று காலை முதலே சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனை அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீனவ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

      • அந்தப் படகிற்கு உரிமையாளர்களான முத்து, உதயகுமார், சக்கரபாணி, குமரன் உள்ளிட்ட 20 பேர் மற்றும் மீனவ பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
      • எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு ப்பணியில் ஈடு பட்டுள்ளனர்.

      விழுப்புரம்: 

      மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் பகுதியில் நேற்று மாலை கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதனால் அந்தப் படகிற்கு உரிமையாளர்களான முத்து, உதயகுமார், சக்கரபாணி, குமரன் உள்ளிட்ட 20 பேர் மற்றும் மீனவ பொதுமக்கள் அங்கு திரண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த விசைப்படகு புதுச்சேரி துறை முகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதனை அடுத்து நேற்று மரக்காணம் கூனிமேடு குப்பத்திற்கு கொண்டு வந்து கடற்கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இந்த படகு கடலில் மூழ்கியது. இதனால் அங்குள்ள மீனவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

      இதுகுறித்து கடலோர காவல் துறை ரோந்து பணியி னருக்கும், மரக்கணம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் போதுமான வசதிகளுடைய துறைமுகம் அமைக்க வேண்டுமென அங்குள்ள மீனவ பொது மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்கள் சாலை மறியல் செய்யப்போவதாக கூறினர் இதனை அறிந்த அதிகாரி கள் போலீசார் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு எந்தவித அசம்பா விதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு ப்பணியில் ஈடு பட்டுள்ள னர். இதனால் அந்த பகுதி யில் பரபரப்பாக உள்ளது. 

      7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

      காரைக்கால்:

      கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற, காரைக்கால் மேடு மீனவர்கள் 7 பேர் மாயமானது குறித்து, இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக தே டிவருகின்றனர்.

      காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). இவருக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 18-ந் தேதி கிருஷ்ணமூர்த்தி, அதே கிராமத்தை சேர்ந்த பாலாஜி (36), முருகானந்தம் (40), வேலுச்சாமி (55), செந்தில் (38) மற்றும் கீழக்கசாக்குடி மேட்டை சேர்ந்த ராமசாமி (52), ராஜ்குமார் (30) ஆகிய 7 மீனவர்கள் வழக்கம்போல், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

      அவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

      இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் காரைக்கால் கடலோர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை சென்னை தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் மாயமான 7 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

      ×