search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ball Tampering"

    தென்ஆப்பிரிக்கா தொடரில் பந்தை சேதப்படுத்தி தடைபெற்ற பான்கிராப்ட் கிளப் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கேப் டவுனில் நடைபெற்று 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். இதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது.

    தடைவிதிக்கப்பட்ட ஸ்மித் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருந்தார். அதன்பின் சமீபத்தில் சொந்த நாடு திரும்பினார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறன்றனர். ஆஸ்திரேலியா கிரக்கெட் வாரியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஸ்மித், வார்னரால் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட முடியும் என்று கூறி வருகிறார்கள்.



    இதற்கிடையே கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஸ்மித், வார்னருக்கு நியூ சவுத் வேல்ஸ் அனுமதி அளித்தது. இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய பான்கிராப்ட் கிளப் கிரிக்கெட்டில் விளையாட வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

    ஆலன் பார்டன் என்னிடம் கேட்டிருந்தால் பந்தை சேதப்படுத்தியிருப்பேன் என ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.

    பின்னர் நடைபெற்ற விசாரணையில் வார்னர்தான் இதற்கு மூலக்காரணமாக இருந்தார் என்பது தெரியவந்தது. அத்துடன் கேப்டன் ஸ்மித் இந்த விவகாரம் தனக்குத் தெரியும் என்றார். இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும், வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தால் தலைமை பயிற்சியாளராக இருந்த லீமென் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக ஜஸ்டின் லாங்கர் தற்போது தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



    சீனியர் வீரர்கள் சொல்லியிருந்தால் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியிருக்கனும். நான் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடிலெய்டில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். அப்போதுள்ள அணி வேறு. அந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.

    மேலும், இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘பந்தை சேதப்படுத்த வேண்டும் என்று ஆலன் பார்டன் என்னிடம் கேட்டிருந்தால், நான் பந்தை சேதப்படுத்தியிருப்பேன். ஏனென்றால், நான் அதிக அளவில் பயந்திருக்கமாட்டேன். ஆனால் ஆலன் பார்டன் இதுபோன்று ஒருபோதும் என்னிடம் கேட்டிருக்கமாட்டார். பயிற்சியாளர் பாபி சிம்சனும் என்னை கொன்றிருக்கமாட்டார்’’ என்றார்.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்ற ஸ்மித், வார்னருக்கு கிளப் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Smith #warner
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கேப் டவுனில் நடைபெற்று 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். இதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது.



    தடைவிதிக்கப்பட்ட ஸ்மித் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருந்தார். அதன்பின் சமீபத்தில் சொந்த நாடு திரும்பினார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறன்றனர். ஆஸ்திரேலியா கிரக்கெட் வாரியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஸ்மித், வார்னரால் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட முடியும் என்று கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கிளப் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித், வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
    ×