search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bakkery"

    • ந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரி செயல்பட்டு வருகிறது.
    • 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பேக்கரி கேசியர் ரவியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

    கோவை

    கோவை விளாங்குறிச்சி ரோடு சேரன் நகரை சேர்ந்தவர் ரவி (48).

    இவர் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் வழக்கம்போல ரவி பேக்கரியில் வேலையை கவனித்து கொண்டிருந்தார்.

    அப்போது பேக்கரிக்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பேக்கரி கேசியர் ரவியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

    அவர் கொடுக்க மறுத்து வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரவியிடம் இருந்து ரூ.2,400 பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

    இது குறித்து ரவி காட்டூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கத்தி முனையில் பறித்த நபர்கள் குறித்து விசாரித்தனர்.

    இதில், பணம் பறித்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சிவந்திபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஸ்டீபன்ராஜ்(24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொரு வாலிபர் பாலாஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×