search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arulnidhi"

    • இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'திருவின் குரல்'.
    • இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் நடித்து வருகிறார்.


    இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'திருவின் குரல்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • அருள்நிதி தற்போது சை.கௌதமராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.


    கழுவேத்தி மூர்க்கன் போஸ்டர்

    மேலும், இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




    • அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

     

    அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டார்.

    டிமான்ட்டி காலனி 

    டிமான்ட்டி காலனி 

     

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். இதனிடையே டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    டிமான்ட்டி காலனி 

    டிமான்ட்டி காலனி 

     

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை அருள்நிதி இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி டிமான்டி காலனி இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று அருள்நிதி பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நடித்திருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை வித்யாசமான கெட்-அப் உடன் வெளியிட்டிருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி. 'களத்தில் சந்திப்போம்' படத்தை தொடர்ந்து இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் 'டைரி' படத்திலும், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 'தேஜாவு' படத்திலும், விஜய் குமார் இயக்கத்தில் 'டி பிளாக்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்குவர இருக்கிறது.

    அருள்நிதி

    அருள்நிதி

    இந்நிலையில் அருள்நிதி நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட்டை வித்யாசமான கெட்-அப் உடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அருள்நிதி அறிவித்துள்ளார். அருள்நிதி அடுத்த படத்தில், ராட்சசி படத்தை இயக்கிய கௌதம் ராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, டி இமான் இசையமைக்கவுள்ளார். அருள்நிதி கிராமத்து இளைஞனாக முரட்டு மீசையில் இருக்கும் கெட்-அப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    விஷாலின் இரும்புத்திரை மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் திட்டமிட்டு நடந்ததா என்று தமிழ் சினிமாவில் சர்ச்சை பேச்சு அடிபடுகிறது. #IAK #Irumbuthirai
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. அப்படி மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தத்தை பெரும்பான்மையானோர் ஆதரித்தாலும் சில எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. 

    அப்படி எழுந்த எதிர்ப்புக்குரல்களில் அருள்நிதியும் ஒருவர். ‘வேலை நிறுத்தம் செய்யாமலேயே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். இதற்காகவா உங்களை பதவியில் அமர வைத்தோம்?’ என்று நேரடியாக விமர்சித்தார். 



    நாளை (வெள்ளிக்கிழமை) விஷால், அருள்நிதி நடித்த படங்கள் நேரடியாக மோது கின்றன. ஜனவரி முதல் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்ட விஷாலின் இரும்புத்திரை படமும், அருள்நிதி நடிப்பில் உருவான இரவுக்கு ஆயிரம் கண்கள் படமும் வெளியாகின்றன. இது எதேச்சையாக நிகழ்ந்ததா? இல்லை திட்டமிட்டு இருவரும் வெளியிடுகிறார்களா? என்ற சர்ச்சை தமிழ் சினிமாவில் ஓடுகிறது. #IAK #Irumbuthirai 

    ×