search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிமான்ட்டி காலனி"

    • டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
    • இந்த படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது.

    இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது டிமான்டி காலனி 2. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

    விரைவில் வெளியாக இருக்கும் டிமான்டி காலனி 2 படம் குறித்து டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., "இயக்குனர் அஜய்-யிடம் இருந்து ஆரம்பிக்கிறேன். ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்திற்குத் தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம் கலைஞன் தோற்பதில்லை."

     


    "இந்தப்படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இந்தப்படத்தில் வேலை பார்ப்பதற்காக, நான் வேறு பல படங்களை செய்யவில்லை, கொஞ்சம் வருத்தம் தான் ஆனால் இறுதியாகப் படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார்."

    "தயாரிப்பாளர் பாபி சார் படத்தைக் காதலித்து ரசித்து தயாரிக்கிறார். டெக்னிகல் டீம் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சி.ஜி. எல்லாம் அருமையாக வந்துள்ளது. இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது, ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.


     

    இப்படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

    • டிமான்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
    • டிமான்டி காலனி 2 படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    'டிமான்டி காலனி' படத்தின் முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

     


    சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்த நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் டீரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி -2'.
    • இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.


    டிமான்ட்டி காலனி 2 போஸ்டர்

    இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 5.01-க்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

    'டிமான்ட்டி காலனி -2' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி -2'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    டிமான்ட்டி காலனி

    இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் 98 சதவீத படப்பிடிப்புப் பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில காட்சிகளே மீதியிருப்பதாகவும், அதுவும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    • அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

     

    அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டார்.

    டிமான்ட்டி காலனி 

    டிமான்ட்டி காலனி 

     

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். இதனிடையே டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    டிமான்ட்டி காலனி 

    டிமான்ட்டி காலனி 

     

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை அருள்நிதி இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி டிமான்டி காலனி இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று அருள்நிதி பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் டிமான்ட்டி காலனி 2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

    2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.


    டிமான்ட்டி காலனி

    அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.


    பிரியா பவானி சங்கர்

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். இந்நிலையில், டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

    ×