search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "america president trump"

    அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட குழுவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. #Trump #Kimjanun #UNSecurityCouncil
    நியூயார்க்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும், பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட குழுவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    டிரம்ப் - கிம் சந்திப்பின் போது 15 பேர் கொண்ட வடகொரியா அதிகாரிகள் குழுவும் இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது. இந்த கடிதத்தை பரிசீலித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், வடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் செல்ல ஒப்புதல் அளித்துள்ளது. #Trump #Kimjanun #UNSecurityCouncil
    சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தென்படுகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump #KimJongUn
    வாஷிங்டன்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும், பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.



    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படுகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. 

    சீன அதிபருடனான சந்திப்புக்கு பிறகு கிம் ஜாங் அன் நடவடிக்கைகளில் பல்வேறு மாறுபாடுகள் தென்படுகின்றன. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். #Trump #KimJongUn  
    ×