search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allows"

    கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #Temples #TNGovt #SupremeCourt
    புதுடெல்லி:

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 19 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மேலும் அப்பகுதியில் உள்ள மண்டபத்தின் மேற்கூரைகள், தூண்கள் சேதம் அடைந்தன.

    இதற்கிடையே, மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோயில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதுதொடர்பான, மேல் முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    இந்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #Temples #TNGovt #SupremeCourt
    ×