search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "activity"

    • தனியார் கணினி மையங்களில் வருவாய்த்துறை சான்றிதழ் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் கணினி மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய Citizen Login முறையாக அரசு அனுமதி பெறாமல் 20 வகையான வருவாய்த்துறை சான்றுகள்,

    6 வகையான முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்கிறார்கள். அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்று களில் எழுத்து பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல் மற்றும் இடைதரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுகிறது என்று புகார்கள் வருகின்றன.

    பொது இ-சேவை மைய ங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றி தழ்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.10-ம், சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120-ம், இணைய வழி பட்டா மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம் சேவை கட்டணமாக பெறப்படுகிறது.

    தனியார் கணினி மையங்களில் Citizen Login-ல் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, சான்றுகள் சம்மந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ அபராதம் மற்றும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை அணுக வேண்டும்.

    சான்றுகளை விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக கட்டண புகார்களுக்கு edm1rmd.tnegatn.gov.in என்ற மின்னஞ்சலுக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின் மாவட்ட மேலாளரிடம் நேரடியாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுக்கு இலவசமாக சுத்தமான குடிநீர் வழங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மது அருந்தாமல் பாதுகாத்து கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையத்தின் பொதுக்குழு கூட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மவுண்ட் சீயோன் கிராமத்தில் நடந்தது.

    தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமணசாமி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மவுண்ட் சியோன் கிளைத்தலைவர் எட்வின் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    25 ஆண்டுகள் பொதுச் செயலாளராக செயல்பட்டு வரும் காப்பாளர் மனோகரன் சாமுவேலுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி வருவாய் அலுவலர் முத்துச்செல்வனுக்கும் விருது வழங்கப்பட்டது.

    நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா, ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ஷியாம் ராஜா ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதினை நுகர்வோர் மன்ற உறுப்பினர் தர்மகிருஷ்ணராஜா வழங்கினார். ''தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005'' என்ற புத்தகத்தை பொதுச் செயலாளர் மனோகரன் சாமுவேல் வெளியிட்டார்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக மாரிமுத்து துணைத்தலைவராக தர்ம கிருஷ்ணராஜா, செயலாளராக லட்சுமண சாமி, பொதுச்செயலாளராக சாமுவேல் மனோகரன், ராஜேந்திரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    ராஜபாளையத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும், நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஐ.என்.டி.யு.சி. நகர் வழியாக ெரயில்வே தண்டவாளம் நோக்கி செல்லும் பாதையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றக் வேண்டும், பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் உயர் அழுத்த மின் கம்பம் அமைத்து அதில் மின் விளக்குகள் பொருத்தி, மது அருந்தாமல் பாதுகாத்து கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவர்களின் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்.கவுதமசிகாமணி எம்.பி. கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
    • பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கவுதமசிகாமணி கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷர்வன்குமார் ஜடாவத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவில் கூறியுள்ளதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற விரும்பத்தகாத செயல் வேதனைக்குரியது. அந்தப் பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனால் சுமார் 4000 மாணவர்கள் படிப்புகேள்விக்குறியாகி உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் உடனடியாக கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும். உடனடியாக மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கல்வி வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையால் பயனடைந்தவர்களில் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் உத்தரவின்படி சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்த மாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்ததாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டு 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 85 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்த ரூ.6 லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், கஞ்சா வியாபாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி சார்ந்த புலன் விசாரணை மேற்கொண்டு அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அதனால் பயன் அடையும் அவர்களது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் என மொத்தம் 54 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, கடந்த காலங்களில் இதுபோன்று கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதனால் பயன் அடைந்த அவர்களது குடும்பத்தாரின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும் தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த அதிரடி நடவடிக்கை தொடரும். கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் எனது பிரத்யேக செல்போன் எண்ணான 7603846847 மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 04567-230759 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×