search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுகர்வோர் பொதுக்குழு கூட்டம்
    X

    நுகர்வோர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    நுகர்வோர் பொதுக்குழு கூட்டம்

    • பொதுமக்களுக்கு இலவசமாக சுத்தமான குடிநீர் வழங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மது அருந்தாமல் பாதுகாத்து கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையத்தின் பொதுக்குழு கூட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மவுண்ட் சீயோன் கிராமத்தில் நடந்தது.

    தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமணசாமி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மவுண்ட் சியோன் கிளைத்தலைவர் எட்வின் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    25 ஆண்டுகள் பொதுச் செயலாளராக செயல்பட்டு வரும் காப்பாளர் மனோகரன் சாமுவேலுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி வருவாய் அலுவலர் முத்துச்செல்வனுக்கும் விருது வழங்கப்பட்டது.

    நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா, ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ஷியாம் ராஜா ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதினை நுகர்வோர் மன்ற உறுப்பினர் தர்மகிருஷ்ணராஜா வழங்கினார். ''தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005'' என்ற புத்தகத்தை பொதுச் செயலாளர் மனோகரன் சாமுவேல் வெளியிட்டார்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக மாரிமுத்து துணைத்தலைவராக தர்ம கிருஷ்ணராஜா, செயலாளராக லட்சுமண சாமி, பொதுச்செயலாளராக சாமுவேல் மனோகரன், ராஜேந்திரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    ராஜபாளையத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும், நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஐ.என்.டி.யு.சி. நகர் வழியாக ெரயில்வே தண்டவாளம் நோக்கி செல்லும் பாதையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றக் வேண்டும், பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் உயர் அழுத்த மின் கம்பம் அமைத்து அதில் மின் விளக்குகள் பொருத்தி, மது அருந்தாமல் பாதுகாத்து கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×