search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abdominal pain"

    நெய்வேலி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த முதணை கிராமம் தென்குந்தன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). தொழிலாளி.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஊ.மங்களம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்தம்பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுரேஷ் வயிற்று வலி காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    பண்ருட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த பண்டாரக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 63), விவசாயி. இவர் தனது வயலில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கண்ணன் இறந்தார்.

    இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் கண்ணனுக்கு வயிற்று வலி இருந்தது இதன் காரணமாக அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகள் முத்தமிழரசி (வயது 21). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இந்நிலையில் முத்தமிழரசி மற்றும் உடன்பிறந்தவர்கள் கற்பகவல்லி, ஹரிகரன் ஆகியோர் தட்டார்மடம் பெரியப்பா முத்துவேல் வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக முத்தமிழரசிக்கு தீராத வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த 27-ந் தேதி விஷத்தை குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முத்தமிழரசி இறந்தார்.  

    இது குறித்து தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×