search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YSRC Congress"

    மக்கள் வைத்த நம்பிக்கையை ஜெகன்மோகன் ரெட்டி நிச்சயம் காப்பாற்றுவார் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்தார்.
    நகரி:

    நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே படம் ஆந்திராவிலும் வருகிற 31-ந்தேதி தெலுங்கில் வெளியாகி உள்ளது. அதுகுறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐதராபாத் வந்த நடிகர் சூர்யா ஆந்திரா அரசியல் குறித்து நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அவர் குடும்பத்தை சேர்ந்த அனில் ரெட்டி என்னுடன் படித்தவர். ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி சாதித்த வெற்றி அபூர்வமானது. அவரது தந்தை முதல்வராக இருந்த போது அவர் அமல்படுத்திய பல நலத்திட்டங்கள் ஏழைகளுக்கு எவ்வளவு பயன் அளித்தது என்பது தெரியும். எதிர்பாராத வகையில் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த பிறகு ஜெகன்மோகன் ரெட்டி செய்து வரும் அரசியல் போராட்டம் குறித்தும் தெரியும். 10 ஆண்டுகளாக மக்கள் மத்தியிலேயே இருந்து எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தார். 14 மாதங்கள் 3664 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.


    எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் காப்பாற்றும் குணம் அந்த குடும்பத்திற்கு ஒரு சிறப்பு அம்சம். அதனாலேயே மக்கள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து இமயமலை அளவுக்கு பொறுப்பையும் கொடுத்துள்ளனர். அவர்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர் நிச்சயம் நிலை நிறுத்துவார். வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். மிகக்குறைந்த வயதில் முதல்வரான இரண்டாம் நபர் ஜெகன்மோகன் ரெட்டி என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மீண்டும் மீண்டும் முதல்வராக வெற்றிபெற்று ஆட்சியில் நீடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ‘‘யாத்ரா’’ என்ற சினிமா படம் வெளியிடப்பட்டது. இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    இந்தநிலையில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய அரசியல் போராட்டம், பாதயாத்திரை, சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை வைத்து யாத்ரா-2 படம் தயாரிக்க உள்ளதாகவும் அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது குறித்து நிருபர்கள் கேட்டனர், அதற்கு சூர்யா பதில் கூறும்போது, ‘‘யாத்ரா’’ படத்திற்கு நல்ல டீம் அமைந்தது. மாபெரும் வெற்றியும் பெற்றது. ‘‘யாத்ரா-2’’ குறித்து இன்னும் யாரும் என்னோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கதை அனைவரையும் கவரும் விதமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் சந்தேகமே இல்லை என்றார்.
    ஆந்திர முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி நடிகை ரோஜாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நகரி:

    ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நகரி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார்.

    இதில், ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷ் 76,818 வாக்குகள் பெற்றார். எனவே, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார்.

    கடந்த 2014 சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரைவிட 858 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரோஜா, அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவினார்.


    ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களை நடத்தினார். ரோஜா பிரசாரம் செய்த இடங்களில் 97 சதவீதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ரோஜாதான் அங்கு கேம் சேஞ்சராக மாறி உள்ளார். அதனால் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    அவருக்கு மின்சாரத்துறை வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ரோஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
    ×