search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wednesday"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.
    • புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது.

    புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் உயரலாம் என்றும் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.

    புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

    சந்திரன் நம் மனதை ஆள்பவன். மனதின் எண்ண ஓட்டத்துக்குக் காரணகர்த்தா சந்திர பகவான். புத்திக்கூர்மையைத் தருபவன் புதன் பகவான். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தலம் திங்களூர். புதன் பகவானுக்கு உரிய தலம் திருவெண்காடு.


    புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை. புத பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் என்றும் வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு என்றும் வஸ்திரம் பச்சை நிற வஸ்திரம் என்றும் அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் அவருக்கு பாசிப்பருப்புப்பொடி கலந்த அன்னத்தால் நைவேத்தியம் செய்யவேண்டும் என்றும் புதன் பகவானுக்கான உலோகம் பித்தளை என்றும் விவரிக்கிறது திருவெண்காடு ஸ்தல புராணம்.

    ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே

    சுக ஹஸ்தாய தீமஹி

    தன்னோ புத : பிரசோதயாத் !

    எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபடுங்கள் என்கிறார் வைத்தியநாத குருக்கள்.

    புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசியையும் ஆட்சி பெறும் மாதமாக ஆனி மாதத்தையும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீட்டில் இருந்துகொண்டு, புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபடலாம்.

    இதேபோல், புதன் கிழமைகளில் புதன் ஓரையில் வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரவல்லது. புதன் கிழமையன்று புதன் ஓரை என்பது காலை 6 முதல் 7 மணி வரையும் பின்னர் இரவு 8 முதல் 9 மணி வரையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    எனவே, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தனை பெருமை மிக்க புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும் என்கிறார்கள் பக்தர்கள்.

    • கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • நண்பர்கள், உறவினர்களுக்கும் ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்து க்களை தெரிவிக்கிறார்கள்.



    மதுரை கீழவாசல் தூய மரியன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு பாதிரியார் சிலுவை அடையாளமிட்ட காட்சி

     மதுரை

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால நோன்பை கடைப் பிடித்து சிறப்பு பிரார்த்த னையில் ஈடுபடுவது வழக்கம்.

    இதற்கான தொடக்க நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது சாம்பல் புதன் அன்று தவக்காலத்தில் தொடக்கம் என்பதால் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகிறது.

    மதுரையில் உள்ள அனைத்து தேவாலயங் களிலும் சாம்பல் புதன் தினமான இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெற்றன. மதுரை நரிமேடு, கீழவாசல் அண்ணா நகர் புதூர் பசுமலை காளவாசல், கோச்சடை, கூடல் நகர், தெப்பக்குளம், வில்லாபுரம், தெற்கு வாசல், மேலவாசல் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இன்று சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

    கத்தோலிக்க ஆலய ங்களில் சிறப்பு திருப்பலி கள் இன்று காலை நடத்தப் பட்டன. சி.எஸ்.ஐ தேவா லயங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது.இதில் ஏராள மானோர் கலந்து கொண்டு தவக்காலத்தின் தொடக்க நிகழ்வில் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து 40 நாட்கள் உபவாசம் இருந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்த வர்கள் ஈடுபடு கிறார்கள்.

    இதையடுத்து வருகிற ஏப்ரல் மாதம் 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி அனுஷ்டிக்கப் படுகிறது. அன்றைய தினமும் நாள் முழுக்க நோன்பை கடைபிடித்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள்.இதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் ஒவ்வொரு தேவாலயத்திலும் கிறிஸ்தவர்கள் குருத் தோலை களை கையில் பிடித்தப்படி பேரணியாக சென்று ஓசன்னா பாடல் களை பாடுவார்கள்.இதனைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.

    பின்னர் 3-ம் நாள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதம் 9- தேதி உயிர்ப்பின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை கொண் டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏராள மான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார் த்தனை செய்கிறார்கள். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கும் ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்து க்களை தெரிவிக்கிறார்கள்.


    ×