search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை
    X

    மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள புனித வளனார் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தை ஜோசப், சாம்பலால் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டார்.

    கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை

    • கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • நண்பர்கள், உறவினர்களுக்கும் ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்து க்களை தெரிவிக்கிறார்கள்.



    மதுரை கீழவாசல் தூய மரியன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு பாதிரியார் சிலுவை அடையாளமிட்ட காட்சி

    மதுரை

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால நோன்பை கடைப் பிடித்து சிறப்பு பிரார்த்த னையில் ஈடுபடுவது வழக்கம்.

    இதற்கான தொடக்க நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது சாம்பல் புதன் அன்று தவக்காலத்தில் தொடக்கம் என்பதால் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகிறது.

    மதுரையில் உள்ள அனைத்து தேவாலயங் களிலும் சாம்பல் புதன் தினமான இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெற்றன. மதுரை நரிமேடு, கீழவாசல் அண்ணா நகர் புதூர் பசுமலை காளவாசல், கோச்சடை, கூடல் நகர், தெப்பக்குளம், வில்லாபுரம், தெற்கு வாசல், மேலவாசல் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இன்று சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

    கத்தோலிக்க ஆலய ங்களில் சிறப்பு திருப்பலி கள் இன்று காலை நடத்தப் பட்டன. சி.எஸ்.ஐ தேவா லயங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது.இதில் ஏராள மானோர் கலந்து கொண்டு தவக்காலத்தின் தொடக்க நிகழ்வில் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து 40 நாட்கள் உபவாசம் இருந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்த வர்கள் ஈடுபடு கிறார்கள்.

    இதையடுத்து வருகிற ஏப்ரல் மாதம் 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி அனுஷ்டிக்கப் படுகிறது. அன்றைய தினமும் நாள் முழுக்க நோன்பை கடைபிடித்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள்.இதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் ஒவ்வொரு தேவாலயத்திலும் கிறிஸ்தவர்கள் குருத் தோலை களை கையில் பிடித்தப்படி பேரணியாக சென்று ஓசன்னா பாடல் களை பாடுவார்கள்.இதனைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.

    பின்னர் 3-ம் நாள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதம் 9- தேதி உயிர்ப்பின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை கொண் டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏராள மான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார் த்தனை செய்கிறார்கள். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கும் ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்து க்களை தெரிவிக்கிறார்கள்.


    Next Story
    ×