search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanathi Sreenivasan"

    • பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ’எல்லோருக்கும் எல்லாம்’ என்ற ’சம நீதி’ கொள்கையை தான் பின்பற்றி வருகிறது.
    • பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ஜ.க. எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது.

    கோவை:

    பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டால், பிராமணர் சமுதாயம் மட்டுமே பயன்பெறுகிறது என்ற நச்சு பிரசாரத்தை, ஹிட்லர் யூதர்களிடம் காட்டியது போன்ற வெறுப்புணர்வை தனது பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

    பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோர் என இடஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத அனைத்து ஜாதியினரும், இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் பலன் பெற முடியும்.

    தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.), எஸ்.சி. (அருந்ததியர்), பி.சி. (முஸ்லிம்) என 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்த வரம்புக்குள் வராத சமூகம், பிராமணர் சமூகம் மட்டும்தான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறாரா? வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு என 60-க்கும் அதிகமான ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இதனை ஆர்.எஸ். பாரதி மறுக்கிறாரா? அல்லது இந்த சமூகங்களுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு தேவையில்லை. இந்த சமூகங்களில் ஏழைகளே இல்லை, அவர்களெல்லாம் பணக்காரர்கள் என்று கூற வருகிறாரா? என்பதை அவர் விளக்க வேண்டும்.

    பா.ஜ.க.வைப் பொறுத்தவரை 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற 'சம நீதி' கொள்கையை தான் பின்பற்றி வருகிறது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ஜ.க. எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அதனை செயல்படுத்தியும் வருகிறது.

    தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வருகிற சமூகங்கள் எவை என்பது அனைவருக்கும் தெரியும். 69 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத சமூகங்கள் எவ்வளவு என்பது பற்றியும், அவர்களில், உயர் கல்வி பெற்றோர் எத்தனை சதவீதம்? அரசு வேலைவாய்ப்பு பெற்றோர் எத்தனை சதவீதம்? என்பது பற்றிய புள்ளி விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    தமிழகத்தில் இட ஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், அவர்களில் உயர் கல்வி பெற்றோர் எத்தனை சதவீதம், அரசு வேலைவாய்ப்பு பெற்றோர் எத்தனை சதவீதம் என்பது பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

    தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, பிராமண வெறுப்புணர்வை விடாமல் வளர்த்து வரும் தி.மு.க., அதற்காக இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத 60-க்கும் அதிகமான மற்ற சமூகங்களையும் சேர்த்து பலியிட்டு விட வேண்டாம்.

    1949-ல் தொடங்கப்பட்ட தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு இதுவரை ஒரு பெண்மணியோ, அல்லது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரோ வர முடியவில்லை. இனியும் வருவதற்கான அறிகுறியும் இல்லை. இதுதான் சமூக நீதியா என்பதையும் தி.மு.க.வினர் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    பிரசித்தி பெற்ற சிறுமுகை கைத்தறி ஆடைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    தேசிய கைத்தறி நாளையொட்டி பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட கைத்தறி பே‌ஷன் ஷோ இன்று கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.

    பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கைத்தறி ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக மேடையில் நடந்து வந்து அசத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

    பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடி விவசாயத்துக்கு அடித்தபடியாக கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கைத்தறி ஆடை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. கைத்தறி ஆடைகளை நாம் பயன்படுத்தினால் அது நெசவாளர்களை ஊக்கப்படுத்தும்.

    கடந்த ஆண்டு 40 கல்லூரிகளில் மக்கள் சேவை மையம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நாம் பயன்படுத்தும் ஆடைகளில் 30 சதவீதம் கைத்தறி ஆடை இருக்க வேண்டும். கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    பிரசித்தி பெற்ற சிறுமுகை கைத்தறி ஆடைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கு இந்துஸ்தான் கல்லூரி செயலாளர் சரஸ்வதி கண்ணையன், நடிகை மாளவிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×