search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "University of Hyderabad"

    • ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் வெமுலா கடந்த 2016 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்
    • பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரின் தற்கொலைக்கு, சாதி வேறுபாடு தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது

    ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்பு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் வெமுலா கடந்த 2016 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரின் தற்கொலைக்கு, பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., உடனான மோதலும், சாதி வேறுபாடும் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத் போலீசார், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதில் "ரோகித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரே அல்ல. அவரின் தந்தை ஓ.பி.சி. இனத்தைச் சேர்ந்தவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ரோகித்தின் தாய் ராதிகா, உண்மையை மறைத்து போலி சான்றிதழ் பெற்றுள்ளார். உண்மையான சாதி அடையாளம் வெளியே தெரிந்ததால் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தில் தான் ரோகித் தற்கொலை செய்துள்ளார். இதற்கு யாரும் காரணம் அல்ல" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ரோகித் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதே சமயம், இந்த அறிக்கையில் சில சந்தேகங்கள் உள்ளன. ரோகித் வெமுலாவின் தாயும், அவரைச் சார்ந்தோரும் சில சந்தேகங்களை எழுப்பினர்

    ஆதலால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெலங்கானா டிஜிபி ரவி குப்தா தெரிவித்துள்ளார்.

    சைபர் பாதுகாப்பு எனும் புதிய பாடதிட்டத்தை ஐதராபாத் பல்கலைக்கழகம் இன்று அறிமுகம் செய்துள்ளது. #UniversityofHyderabad #CyberSecurity
    ஐதராபாத் :

    ஐதராபாத் பல்கலைக்கழகம் தகவல் பாதுகாப்புடன் கூடிய ”சைபர் பாதுகாப்பு” எனும் முதுகலை பாடத்திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. 

    தற்போதைய 2018-19 கல்வியாண்டு முதல், இரண்டு வருடத்திற்கான சைபர் பாதுகாப்பு பாடத்திட்டதின் முழுநேர பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. 2018, 2017, 2016-ஆம் ஆண்டு கேட்(GATE) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க முடியும். இந்த பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறும் ஒவ்வொருவருக்கும் எ.ஐ.சி.டி.ஈ-கேட்(AICTE-GATE) சான்றிதழ் வழங்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் ஜூன் 7-ம் தேதி முதல்  ஜூன் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். மேலும், மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பதற்காக கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. #UniversityofHyderabad #CyberSecurity
    ×