search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "travel ban"

    • 2017ல் அமெரிக்காவிற்கு உள்ளே வருவதை சில அரபு நாடுகளுக்கு தடை விதித்தார்
    • இஸ்ரேல் அமெரிக்காவின் உற்ற நண்பன் என டிரம்ப் தெரிவித்தார்

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முந்தைய பதவிக்காலத்தில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து அந்நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதை தடை செய்யும் விதமாக பல கட்டுப்பாடுகளை புகுத்தினார்.

    ஆனால், டிரம்பிற்கு பிறகு பதவிக்கு வந்த ஜோ பைடன், இந்த உத்திரவுகளை நீக்கி விட்டார்.

    அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் பதவிக்கு வர மும்முரமாக களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், நேற்று நிவேடா மாநில லாஸ் வேகாஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    2017ல் நான் ஒரு சில அரபு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்ய பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தது நினைவிருக்கிறதா? 2024 தேர்தலில் வென்றதும் முதல் வேலையாக இந்த கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருவேன். பயங்கரவாதிகளை அமெரிக்காவிற்கு வெளியே நிறுத்தி விடுவேன். இஸ்ரேல் அமெரிக்காவின் உற்ற நண்பன். இறுதி வரை இஸ்ரேலுடன் வேறு எந்த நாட்டை காட்டிலும் உறுதியுடன் அமெரிக்கா துணை நிற்கும். இஸ்ரேல்-ஹமாஸ் போர் என்பது மனித நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையேயான போர்; நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போர்.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    கூடலூர்- கேரள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கேரளா மட்டுமின்றி கூடலூரிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையொட்டி பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரளாவின் பெருந்தல்மன்னா, பாலக்காடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர்- கேரள எல்லையான கீழ்நாடுகாணி அண்ணா நகர் பகுதியில் நெடுஞ்சாலையில் திடீரென விரிசல் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரீன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து அந்த வழியே சரக்கு லாரிகள் உள்பட கனரக வாகனங்களை இயக்க தடை விதித்தனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மேலும் கூடலூர்- கேரள சாலையில் ஏற்பட்ட விரிசல் 80 மீட்டர் நீளத்துக்கும் 2 அடி அகலத்துக்கும் பெரிதாகியது. எனவே அந்த வழியாக கார்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

    மழை தொடரும் பட்சத்தில் சாலை துண்டிக்கும் அபாயம் காணப்படுகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் கூடலூரில் இருந்து வயநாட்டிற்கு வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. தற்போது மலப்புரத்துக்கு செல்லும் சாலையும் துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கர்நாடகா மற்றும் ஊட்டியில் இருந்து வந்த சரக்கு லாரிகள் கூடலூர் கோழிப்பாலம் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடலூர்- கேரள வழியாக அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக கேரளாவுக்கு அரிசி, காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கூடலூர் பகுதியில் மழை சேதத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று மாலை 4 மணியளவில் பார்வையிட்டார். அப்போது கூடலூர்- ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்த பகுதி மற்றும் தேன்வயல் ஆதிவாசி கிராமத்துக்கு சென்றார்.

    பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கூடலூர்- கேரள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டார்.

    பின்னர் விரிசலை விரைந்து சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
    சிரியா, ஈரான் உள்ளிட்ட 5 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் தடை விதித்த உத்தரவுக்கு ஆதரவாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. #TrumpTravelBan
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என அதிரடியாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த பயணத்தடை உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி விமர்சிக்கப்பட்ட நிலையில், வணிகம், கல்வி போன்ற பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களை அனுமதிக்கலாம் என்றும் அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் மிக நெருக்கமான உறவினர்களை அனுமதிக்கலாம் என்றும் பின்னர் பயணத்தடையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.

    வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டன. டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பல மாகாண கோர்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, இந்த பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டது.

    பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான், ஈராக் நாடுகள் விலக்கப்பட்டன. இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து அந்நாட்டு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த தடையை விலக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் மட்டுமே அதிபரின் உத்தரவை தடை செய்ய அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல அமைப்புகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், டிரம்ப்பின் பயணத்தடை சரியே என இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி கொண்ட 5 நீதிபதிகள் அமர்வில், நான்கு நீதிபதிகள் டிரம்ப் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.
    ×