search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourist area"

    கர்நாடக மாநிலம் மாண்டியாவின் முத்தாதி சுற்றுலா பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் முதலை தாக்கியதில் 52 வயது நபர் உயிரிழந்தார். #crocodileattack
    மாண்டியா:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் முத்தாதி சுற்றுலா பகுதியில் நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். சிலர் அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற 52 வயது நபரும் காவிரி ஆற்றில் குளித்தார். தண்ணீரில் நீச்சலடித்தபடி சற்று தொலைவுக்கு சென்றபோது, திடீரெனை அவரை முதலை தாக்கி ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது.

    இதைப் பார்த்த மற்றவர்கள் கூச்சலிட, சில இளைஞர்கள் ஆற்றினுள் குதித்து முதலையை கம்புகளால் தாக்கினர். முதலை சற்று மிரண்ட சமயத்தில், அதன் வாயில் சிக்கியிருந்த வெங்கடேசை வெளியே இழுத்தனர். ஆனால், அதற்குள் வெங்கடேஷ் இறந்துவிட்டார்.

    இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்தது. முத்தாதி சுற்றுலா பகுதியில் முதலை தாக்கி உயிரிழப்பது இதுவே முதல் முறை என்று சூழியலாளர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #crocodileattack
    ×