search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலை"

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • ஒரு விலங்கு ஏன் நரமாமிசத்தை தேடுகிறது? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    வன விலங்குகள் வேட்டை தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் ரசனையாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் முதலை வேட்டை தொடர்பான வீடியோ இணைய பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அதில், ஒரு ஓடையில் பெரிய முதலை மெதுவாக தண்ணீரில் மிதந்து செல்கிறது. அப்போது அங்கு ஒரு சிறிய முதலை செல்வதையும், திடீரென பெரிய முதலை அந்த குட்டி முதலையை பிடித்து உண்ணும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இணையத்தில் வைரலாகி 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஒரு விலங்கு ஏன் நரமாமிசத்தை தேடுகிறது? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர், இதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
    • முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.

    குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.

    முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    • விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    சிறுமுகை அருகே உள்ள மொக்கைமேடு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார்.

    அப்போது வாழைமரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று மாறுபட்ட கலரில் தென்பட்டுள்ளது. உற்றுப் பார்த்தபோது அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது. ஆறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் அங்கு இருந்து முதலை வெளியேறி வாழைத்தோட்டத்தில் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்.

    • வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.
    • வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள அப்துல்ரசித் வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.

    இத்தகவலின் படி சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு தலைமையில் வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    அங்கிருந்த முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

    • கோழி இறைச்சியை சாப்பிட வரும் போது முதலை சிக்கும் என நம்பி காத்திருந்தனர்.
    • நள்ளிரவு 1.30 மணிக்கு முதலை கோழி இறைச்சியை சாப்பிட வெளியே வந்த போது கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜ் சாலையில் நேற்று பகல் உப்பனாறு வாய்க்காலில் முதலை குட்டி ஒன்று காணப்பட்டது.

    இதனை பாலத்தையொட்டியுள்ள கடையில் பணிபுரியும் ஊழியர் ஏழுமலை முதலில் பார்த்துள்ளார்.

    அவர் தனது நண்பரான ராஜாவிற்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து முதலையை புகைப்படம் எடுத்தார். அதற்குள் அங்கு கூடிய மக்கள் சுமார் 4 அடி நீளமுள்ள முதலையை புகைப்படம் எடுத்து வனத்துறைக்கு தெரிவித்தனர்.

    முதலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் அறிந்து காமராஜ் சாலையில் ஏராளமான பொது மக்கள் கூடினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பொதுமக்கள் பீதியும் அடைந்தனர்.

    அப்போது ஏற்பட்ட வாகன சத்தத்தால் முதலை தண்ணீருக்குள் மூழ்கி ஒளிந்து கொண்டது.

    இதனிடையே முதலையை பிடிக்க வாய்காலில் இறங்கிய வனத்துறையினர் முதலையை தேடினார்கள்.

    அங்கு வந்த வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி ஊழியர்களிடம் வாய்க்காலின் ஆழத்தை கணக்கிட கூறினார்.

    5 அடி ஆழம் இருந்ததால் நீரோட்டத்தை நிறுத்தி விட்டு முதலையை பிடிக்கலாமா.? அல்லது கூண்டு வைத்து பிடிக்கலாமா என ஆலோசித்தனர். இறுதியில் முதலையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

    வாய்க்கால் கரை ஓரம் வசிக்கும் பொதுமக்கள் முதலையை பார்த்தால் தானாக பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் தண்ணீருக்குள் இறங்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    இரவு 8 மணிக்கு முதலையை பிடிக்க கோழி இறைச்சியை வைத்து கூண்டு ஒன்றினை தயார்படுத்தினர். மக்கள் கூட்டம் குறைந்த பின்னர் வாகன நடமாட்டமும் குறைந்த பிறகு முதலை தென்பட்ட அதே இடத்தில் கூண்டை இறக்கி வைத்தனர்.

    கோழி இறைச்சியை சாப்பிட வரும் போது முதலை சிக்கும் என நம்பி காத்திருந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு முதலை கோழி இறைச்சியை சாப்பிட வெளியே வந்த போது கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

    இதனையடுத்து 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முதலையை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றனர்.

    புதுவை நகர பகுதியில் பிரதான சாலையை இணைக்கும் வகையில் செல்லும் உப்பனாறு வாய்க்காலில் முதலை வந்தது எப்படி.? என கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் வெள்ளவாரி வாய்க்காலில் இருந்து முதலை தண்ணீரில் அடித்து வரப்பட்டு உப்பனாற்றுக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

    • குரும்பபாளையம் குட்டையில் முதலை நடமாட்டம் தென்பட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • முதலையை தேடி பிடித்து அடர்ந்த காட்டுக்குள் உள்ள அணையில் பத்திரமாக விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோவை:

    கோவை காரமடை அடுத்த பெள்ளாதி பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய குளம் அமைந்து உள்ளது. இது 100 ஏக்கர் பரப்பளவு உடையது. சுமார் 30 அடி உயரம் கொண்டது.

    கட்டாஞ்சிமலை, மருதூர், திம்மம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், ஏழுஎருமைப்பள்ளம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் இருந்து பெள்ளாதி குளத்துக்கு நீர்வரத்து உள்ளது.

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. எனவே அந்த பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன்காரணமாக பெள்ளாதி குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து தற்போது ஒட்டுமொத்த நீர்நிலையும் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அங்கு தேங்கும் உபரிநீர் தண்ணீர் மறுகால் பாய்ந்து குரும்பப்பாளையம் குட்டைக்கு செல்கிறது.

    இந்த நிலையில் குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குளக்கரைக்கு சென்றனர்.

    அப்போது அங்கு உள்ள ஒரு பாறையில் பெரிய முதலை சாவகாசமாக படுத்திருந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் குரும்பபாளையம் குட்டையோரத்தில் கிடந்த முதலையை செல்போனில் படம் பிடித்தனர்.

    அப்போது அது திடீரென தலையை தூக்கி பார்த்தது. பின்னர் பாறையில் இருந்து வெளியேறி தண்ணீருக்குள் சென்று விட்டது. அங்கு தற்போது நீந்தியபடி குளத்தை சுற்றி வருகிறது.

    மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்டு வெள்ளம் குரும்பபாளையம் குட்டைக்கு வருகிறது. எனவே காட்டுக்குள் பதுங்கியிருந்த முதலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மேற்கண்ட குட்டைக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    குரும்பபாளையம் குட்டையில் முதலை நடமாட்டம் தென்பட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

    குரும்பபாளையம் குளத்தில் பதுங்கி நிற்கும் முதலையை தேடி பிடித்து அடர்ந்த காட்டுக்குள் உள்ள அணையில் பத்திரமாக விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • குளத்தில் முதலை இருப்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது.
    • 6 மாதமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வேம்பதேவன்காடு பகுதியில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அதே பகுதியில் உள்ள புதுக்குளத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சுமார் 6 மாத்திற்கு முன்பு இந்த குளத்தில் முதலை இருப்பது பொது மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இது குறித்து கோடியக்கரை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தலைமையில் வனக்காவலர்கள் குளத்திற்கு சென்று முதலையை தேடிப்பார்த்தனர். அப்போது முதலை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் குளத்தின் கரையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. பின்னர் குளத்தில் வலைகள் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலையில் பொது மக்கள் அந்த வழியாக நடந்து சென்றனர். அப்போது வலையில் முதலை சிக்கியது தெரியவந்தது. இதைத் தொடந்து பொது மக்கள் கோடியக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனக்காவலர்கள் மற்றும் தீயணைப்புதுறையினர் அங்கு சென்று வலையில் சிக்கிய சுமார் 5 அடி நீள 30 கிலோ எடையுள்ள முதலையை பிடித்தனர். பின்னர் பிடிப்பட்ட முதலை கும்பகோணம் அணைக்கரை பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 6 மாதமாக பொது மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • காமராஜ் வீட்டு தோட்டத்தில் சுமார் 9 அடி நீளமுள்ள140 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தது.
    • வன ஊழியர்கள் புஷ்பராஜ் ஆகியோர் முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் உள்ள காமராஜ் வீட்டு தோட்டத்தில் சுமார் 9 அடி நீளமுள்ள140 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தது. மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் படி சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர்பிரபு,சிதம்பரம் பீட் வன க்காப்பாளர்அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாள ர்ஞா னசேகர்,வனகாப்பாளர் அலமேலு, வன ஊழியர்கள் புஷ்பராஜ் ஆகியோர் முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

    • நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தங்கவேல். தொழில் அதிபரான இவர் மறைந்த பழம் பெரும் நடிகர் பாலையாவின் பேரன் ஆவார்.

    பா.ஜனதா கட்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் மனைவி மற்றும் 2½ வயது மகனுடன் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நீச்சல் குளம் உள்ளது.

    கடந்த சில நாட்களாக தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீச்சல் குளத்தில் தண்ணீர் அசுத்தம் ஆனது.

    இதையடுத்து பாலாஜி தங்கவேல் இன்று காலை நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்பு அந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் கூடையில் அடைத்து வைத்தார். இதுபற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து அந்த முதலைகுட்டியை மீட்டு பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர்.

    வண்டலூர் பூங்காவில் உள்ள முதலை குட்டிகளை உணவுக்காக பறவைகள் தூக்கி செல்லும் போது கீழே விழுவது வழக்கம். இதேபோல் சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இதற்கு முன்பும் தவறி விழுந்த முதலைகள் சிக்கி உள்ளது.

    சாலையில் முதலை நடந்து சென்ற சம்பவமும் நடந்து உள்ளது. பறவைகள் தூக்கி சென்ற போது இந்த முதலை குட்டியும் நீச்சல் குளத்தில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    • சில வீடியோக்கள் ஆபத்தானதாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.
    • 9 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர்.

    சமூகவலை தளங்களில் விலங்குகள் தொடர்பான புதுப்புது வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். சில வீடியோக்கள் ஆபத்தானதாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் இருப்பதை காண முடிகிறது.

    அந்த ஆற்றில் மோட்டார் பொருத்திய படகு ஒன்று முதலைகளின் நடுவே வேகமாக செல்வதையும் காண முடிகிறது. பார்ப்பதற்கு திகிலை ஏற்படுத்தும் இந்த வீடியோ சிசிடிவி இடியட்ஸ் என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 39 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர்.

    • அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை.
    • சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னர்கோவில் பகுதியை சுற்றி பல்வேறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு குளங்கள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் வட்டம் திருநாரையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று குளத்தின் கரை ஓரத்தில் கிடந்தது. இதை அந்த வழியாக கிராமத்திற்குள் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தசெய்தி கிராமத்தில் காட்டுதீ போல பரவி உடனே பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு குளத்தின் அருகே வந்து குளத்தின் ஓரத்தில் கிடந்த முதலையை பார்த்தனர். அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த வனசரக அலுவலர் வசந்த், பாஸ்கரன் தலைமையிலான வன ஊழியர்கள் விரைந்தனர். பின்னர் குளத்தின் ஓரத்தில் இருந்த முதலையை லாவகமாக பிடித்து சிதம்பரம் அருகே வக்கிரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குளத்தில் முதலை புகுந்தது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. 

    • முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படுகிறது.
    • கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை விழுங்கியது.

    கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை ஒன்று விழுங்கிவிட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவை சேர்ந்தவர் 29 வயதான இயேசு ஆல்பர்டோ லோபஸ் ஓர்டிஸ் என்ற கால்பந்து வீரர். தமது ரசிகர்களால் சுச்சோ என அறியப்படும் இவர், துரதிர்ஷ்டவசமாக முதலைக்கு இரையாகியுள்ளார்.

    அந்த முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் அதிகாரிகளே துணிச்சலுடன் நடவடிக்கை முன்னெடுத்து, சடலத்தை மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த நிலையில், இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க, பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×