search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Struggle"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.#Sterlite #thoothukudiProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணி ஜெ.ஜெ.நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தலைவர் முருகேசன் தலைமையில் பொது மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலமாக தேவையான மருத்துவ வசதிகள் தவறாமல் செய்து கொடுக்கப்பட்டு வந்தது.

    மேலும் எங்கள் பகுதியிலுள்ள மிகவும் கஷ்டப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, அடிப்படை வசதிகள், கோவிலுக்கான நிதியுதவி என பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் செய்து வந்தனர்.இதனால் எங்கள் பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் பயன் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் சிலரது சூழ்ச்சியாலும், தேவையில்லாத வதந்தியாலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான பொய்பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளால் தமிழக அரசு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டது.

    ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால் அதனை நம்பி வாழ்ந்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு எங்களைப் போன்ற பல்வேறு பகுதி கிராம மக்களுக்கும் கிடைத்து வந்த அனைத்து வசதிகளும், நலத்திட்ட உதவிகளும் தடைபட்டு முடங்கியுள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Sterlite #thoothukudiProtest
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கலவர வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜாமீனில் விடுதலையானார். thoothukudiProtest #Sterlite
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை கைது செய்தனர்.

    கைதான வியனரசு 55 நாட்களுக்கு மேலாக பாளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தூத்துக்குடி கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து அவரது தரப்பில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.

    இன்று காலை வியனரசு ஜாமீனில் விடுதலையாகி பாளை சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவரை நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பினர் வரவேற்றார்கள். thoothukudiProtest #Sterlite
    தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களை மீண்டும் அழைத்தது ஏன்? என்பது குறித்து ஆலை நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது. #ThoothukudiProtest #sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தபோது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து மே 28-ந் தேதி தமிழக அரசு உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால் அந்த ஆலையில் பணிபுரிந்து வந்த பெரும்பாலான ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

    இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஊழியர்களை சந்திக்க முடிவு செய்தது. அதன்படி அனைத்து ஊழியர்களுக்கும் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஊழியர்கள் பலர் மீண்டும் தங்களது குடியிருப்புக்கு நேற்று திரும்பினர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஏற்பட்டு உள்ள கஷ்டமான சூழ்நிலையில் ஊழியர்கள் தொடர்ந்து எங்களுடன் இருப்பது பெருமையாக உள்ளது. அதே நேரத்தில் ஆலை தொடர்பாக தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து ஊழியர்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமை. இதனால் அனைத்து ஊழியர்களையும் வரவழைத்து உள்ளோம். இது வழக்கமான ஒரு நிகழ்வுதான்.

    தற்போது அரசு உத்தரவுப்படி ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுகுறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் நிரந்தர ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்கம் செய்யவில்லை. அது எங்கள் கொள்கையும் அல்ல. அவர்கள் பணியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மாத சம்பளம் வழங்கி வருகிறோம். எங்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. எனவே தூத்துக்குடியில் பணியாற்றும் ஊழியர்களை வேறு நிறுவனங்களில் பணியமர்த்தி வருகிறோம்.

    ஆலையை சுத்தம் செய்யும் பணிக்காக தான் தற்போது ஊழியர்களை அழைத்து இருக்கிறோம். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து ஆலையில் உள்ள தேவையில்லாத ரசாயன பொருட்கள், கழிவுகளை அகற்ற உதவும்படி எங்கள் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiProtest #sterlite
    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லெட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கலெக்டரிடம் லாரி உரிமையாளர்கள் மற்றும் பெண்கள் மனு அளித்துள்ளனர். #sterlite #ThoothukudiProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்த சிறு,குறு தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள், டேங்கர் லாரிகள் தினசரி தாமிரதாது, ராக் பாஸ்பேட், நிலக்கரி, தாது மணல், அமிலங்கள், இதர மூலப்பொருட்களை கையாள பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன்மூலம் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கண்காணிப்பாளர்கள், அதனுடன் தொடர்புடைய லேத் பட்டறைகள், மெக்கானிக், லாரிக்கு பெயிண்ட் அடிப்போர், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் எங்கள் தொழில் நலிவடைய தொடங்கியுள்ளது. இதனால் தனியார் வங்கிகளில் கடன் தவணை செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். மாத வருமானமின்றி அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்படுகிறோம். வீட்டு வாடகை செலுத்த முடியாமலும், குழந்தைகளின் படிப்பு செலவை சமாளிக்க முடியாமலும் அவதிப்படுகிறோம். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து செயல்பட செய்யவேண்டும்.



    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல தூத்துக்குடி பகுதி கிராமங்களை சேர்ந்த பெண்களும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். #sterlite #ThoothukudiProtest
    ×